Monday, September 25, 2006

Chennai IT நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!!

சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (ஐ.டி) திங்கள்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

போலீஸ் சோதனையில் அதுவெறும் புரளி என்பது தெரியவந்தது.

சென்னை தி.நகரில் ஜிஆர்டி ஓட்டலுக்கு எதிரே தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.) உள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலக உதவி மேலாளரின் செல்போனில் காலை 9.30 மணிக்கு அழைப்பு வந்தது.

அதில், பேசிய நபர் ஐ.டி. நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், காலை 10.30 மணியளவில் அது வெடிக்கக் கூடும் எனக் கூறினார்.

இதுகுறித்து, தி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

1 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தினர். இறுதியில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.


தகவல் : தினமணி

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger