Friday, September 22, 2006

Pondicherry JIPMER ஊழியர்கள் 9 பேர் கைது !!!

ஜிப்மர் இயக்குநரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்கள் 9 பேர் புதன்கிழமை (21-9-2006) கைது செய்யப்பட்டனர்.

புதுவை ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பிரிவினர் சில தினங்களுக்கு முன் தீடீரென்று ஜிப்மர் இயக்குநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக 71 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இது தொடர்பாக போராட்டக் குழுவைச் சேர்ந்த ஆரோக்கியம் கலைமதி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தகவல் : தினமணி

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger