Sunday, September 24, 2006

Tamil Actress Mumtaz மீது கவர்ச்சி காட்டியதாக வழக்கு!!!

வீராசாமி படத்தில் மிகக் கவர்ச்சியாக நடித்திருப்பதாக மும்தாஜ் மீதும் படத்தின் டைரக்டர் விஜ.ராஜேந்தர் மீதும் போலீசில் பாமக நிர்வாகி புகார் கொடுத்தள்ளார்.

சென்னை ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ஜானகிராமன். வழக்கறிஞரான இவர் பாமகவின் வேலூர் வடக்கு மாவட்ட மாணவர் சங்க செயலாளராகவும் உள்ளார். இவர் ராணிப்போட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

விஜய.டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவரவுள்ள வீராசாமி படத்தில் நடிகை மும்தாஜ் மிகவும் கவர்ச்சியாக, சாய்ந்து கொண்டு இருப்து போல் போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை ஒரு கொடுத்திருக்கும் போட்டோவை ஒரு பத்திரிகையில் பார்த்தேன்.




வழக்கறிஞர்கள் புனிதமாகவும், உயர்வாகவும் கருதக்கூடிய ஆல் இண்டியா ரிப்போட் எனப்படும் புத்தகங்களுக்கு அருகிலும், பின்னாலும் மும்தாஜ் படுத்துக் கொண்டிருப்பது போல் படம் உள்ளது. மேற்கூறிய புத்தகங்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஆகும்.


அந்த புத்தகங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றதில் வாதம் செய்யும்போது அடிப்படை மூலாதாரமாக பயன்படுகின்றன. பத்திரிக்கையில் வெளியாகியுள்ள படம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழில் ஆகியவற்றை கேவலப்படுத்துவதாகவும, அவமானப்படுத்தி, கெச்சைப்படுத்துவது போலவும் உள்ளது.


எனவே இந்த படத்தில் நடித்த நடிகை மும்தாஜ், படத்தின் இயக்குனர் விஜய.டி.ராஜேந்தர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் வீராசாமி படத்தில் அந்த கவர்ச்சி படத்தின் ஸ்டில்லை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்படுட்டுள்ளது

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

2 Comments:

At 7:07 AM, Anonymous Anonymous said...

என்ன தல இது...விட்டா அல்வா இனிப்பா இருக்குன்னு சொல்லி அது மேலேயும் கேசு போடுவாங்களா? :-(

 
At 7:57 AM, Blogger வஜ்ரா said...

அம்மணிகிட்ட இருக்குறதத்தான் காட்ட முடியும்...

பாமாக காரங்களுக்கு மூளை இருக்குன்னு யாராவது காட்டுனா நல்லா இருக்கும்...! அடிக்கடி இப்புடியெல்லாம் பண்ணி அது இல்லன்னு காட்டிகினு இருக்கானுங்க..

 

Post a Comment

<< Home

Powered by Blogger