Tuesday, October 17, 2006

அண்ண்னுக்காக Singapore லிருந்து வந்து வாக்களித்த தம்பி!!!

அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அண்ணனுக்காக Singapore லிருந்து வந்து தம்பி வாக்களித்தார்.

சத்தியமங்கலம் அருகேயுள்ளது அரியப்பம்பாளையம் பேரூராட்சி. 15 வார்டுகள் உள்ள பேரூராட்சியில் 9-வது வார்டில் தேமுதிக சார்பில் கே.ரத்தினசாமி போட்டியிடுகிறார். இவரது தம்பி கே.வெங்கிடுசாமி. Singapore ல் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 9-வது வார்டில் வாக்கு உள்ளது.

1 வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றி மாறலாம் எனக் கருதி வெங்கிடுசாமி Singapore லிருந்து வெள்ளிக்கிழமை சத்தியமங்கலம் வந்து அண்ணனுக்காக வாக்களித்தார்.

தகவல்:தினமணி

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger