Wednesday, October 04, 2006

Dinamani செய்தி : விடுதலை சிறுத்தைகள் - பா.ம.க லடாய் !!!

தி.மு.கவோடு கூட்டணி வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம், தற்போது திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை என்று பாமக கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் சித்தாமூர் ஆறுமுகம் புகார் தெரிவித்தார்.

புதன்கிழமை அவர் கூறியது:

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இணைந்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற பாடுபடுவேன் என்று கூறினார்.

இதனால் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, அவர்களுக்கு உரிய மரியாதை தந்து, தேர்தலில் அவர்கள் விருப்பப்படி இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த மொளசூர், முன்னூர் ஆகிய ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் இயக்க மாவட்ட செயலாளர் சேரன், தனது சொந்த ஊரான கீழ் சித்தாமூரில் பா.ம.க வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6-வது வார்டில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளருக்கு எதிராக, அவரது உறவினர் ஒருவரை போட்டியிட செய்துள்ளார்.

மரக்காணம் ஒன்றியம் 25 வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சுகந்திக்கு எதிராக அவர் தனது மனைவி ஷீலாவை போட்டியிட செய்துள்ளார்.

இதுபற்றி பா.ம.கவினர், சேரனை சந்தித்து கேட்டபோது, திருமாவளவனின் அறிக்கை எங்களை கட்டுப்படுத்தாது. அவர் தி.மு.கவோடு கூட்டணி வைத்துள்ளதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர், பா.ம.க வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுகின்றனர். இதனால் தி.மு.க கூட்டணியில் இணைந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக பா.ம.க செயல்படும் என்றார் அவர்.

தகவல் : தினமணி

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger