Friday, September 22, 2006

Pondicherry JIPMER ஊழியர்கள் 9 பேர் கைது !!!

ஜிப்மர் இயக்குநரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்கள் 9 பேர் புதன்கிழமை (21-9-2006) கைது செய்யப்பட்டனர்.

புதுவை ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பிரிவினர் சில தினங்களுக்கு முன் தீடீரென்று ஜிப்மர் இயக்குநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக 71 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இது தொடர்பாக போராட்டக் குழுவைச் சேர்ந்த ஆரோக்கியம் கலைமதி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தகவல் : தினமணி

Thursday, September 21, 2006

Tamil Magazine Thuglak Cartoon - வைகோ பேச்சை கிண்டல் செய்து ...

Labels:


Tamil Actress Trisha பேட்டி !!!



என்னுடைய ரசிகர்கள் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினங்களிலும் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் செய்யப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த "ஸ்டாலின்' என்ற தெலுங்கு படம் இந்தியா முழுவதும் புதன்கிழமை வெளியானது.

இந்த படத்துக்காக துவரை இல்லாத அளவு அதிக பிரிண்ட்டுகள் தயாரிக்கப்பட்டு படம் திரையிடப்பட்டுள்ளது.

சென்னையில் சத்யம், மாயாஜால், கேசினோ உள்ளிட்ட சில திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதையொட்டி த்ரிஷா ரசிகர் மன்றத்தினர் கேசினோ திரையரங்கில் கொடிகள், தோரணங்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.

அதோடு அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு அன்னதானம் வழங்கினர். த்ரிஷா நடித்த எந்த மொழிப் படம் வந்தாலும் அன்னதானம், ரத்ததானம் வழங்கும் காரியங்கள் தொடரும் என்று ரசிகர் மன்றத்தினர் கூறினர்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

இதுதொடர்பாக த்ரிஷாவைத் தொடர்புகொண்ட போது அவர், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் "சைனி குடு' என்ற தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தார். ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்ட போது த்ரிஷா கூறியது:

ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகள் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. "கட்-அவுட்' வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்றவற்றை நான் அனுமதிப்பதில்லை.

ஆதரவற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

இனி வரும் நாள்களில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைத்து பண்டிகை தினங்களிலும், முக்கிய தினங்களிலும் ரசிகர் மன்றங்கள் மூலம் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் போன்றவற்றை செய்யவுள்ளோம் என்றார் த்ரிஷா.

தகவல் : தினமணி

சட்டசபை ஒரு சத்தசபை - கூறுகிறார் SV Shekar



நன்றி : தினமலர்.

Wednesday, September 20, 2006

Internet ல் இப்படியும் சம்பாதிக்கலாமோ !!!

இமெயில் மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, நைஜீரியா நாட்டு இளைஞர் கோவையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸôர் கூறியது:

கோவை என்.எச். சாலையைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்ஸ் ஜார்ஜ் (51). இமெயிலில் இவரைத் தொடர்பு கொண்ட கோபி என்பவர், வெளிநாடு வாழ் இந்தியர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கோவையில் தொழில் தொடங்க விரும்புவதாகவும் அதற்காக ரூ.20 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்தத் தொழிலை கவனித்துக் கொள்ளுமாறு, அலெக்ஸ் ஜார்ஜுடம் கேட்டுக் கொண்டாராம். இதற்கு அலெக்ஸ் ஜார்ஜும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ரூ.20 கோடியை விமானம் மூலம் கண்டெய்னரில் அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

இதன்பின், அலெக்ஸ் ஜார்ஜை தொடர்பு கொண்ட கோபி, ரூ.20 கோடியை கண்டெய்னரில் அனுப்ப செலவாகும் ரூ.10 லட்சத்தை மும்பையில் உள்ள தனது ஏஜெண்ட் மூலம் தனக்கு அனுப்பி வைக்கும்படி கூறினாராம்.

இதை நம்பிய அலெக்ஸ் ஜார்ஜ், மும்பை சென்று கோபி குறிப்பிட்ட 3 பேரிடம் ரூ.10 லட்சத்தைக் கொடுத்துள்ளார். இச்சம்பவம் 23.8.2006-ல் நடந்தது.

இதன்பின்பும் ரூ.20 கோடியை அனுப்பி வைக்கவில்லையாம். ஆனால், கூடுதலாக ரூ.ஒரு லட்சம் கேட்டுள்ளார் கோபி. இதனால் சந்தேகம் அடைந்த அலெக்ஸ் ஜார்ஜ், பணத்தை நேரில் வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதன்படி, கோபியின் உதவியாளர் எனக் கூறி விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை கோவை வந்த இளைஞரைப் பிடித்து போலீஸில் அலெக்ஸ் ஜார்ஜ் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக, வழக்குப் பதிந்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் (31) என்பது தெரியவந்தது.

மைக்கேலை கைது செய்த போலீஸôர், இமெயில் மூலம் ரூ.10 லட்சத்தை ஏமாற்றிய கோபி மற்றும் மும்பையில் அப் பணத்தை வாங்கிய ஏஜெண்ட்கள் 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தகவல் : தினமணி

அஇஅதிமுக கரைகிறது???



தினமலர் 'இது உங்கள் இடம்' பகுதியில் கண்டது.

Tuesday, September 19, 2006

Actress ஸ்னேகாவின் Telugu படத்திற்கு High Court தடை!!!


இலவச டிவி ஒரே நாளில் ரிப்பேர் ஆனது.!!!



நன்றி : தினமலர்.

Monday, September 18, 2006

134340


சூரியக் குடும்பத்தில், சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் கோள் எனப் பெருமை பெற்றிருந்த ப்ளூட்டோவின் தகுதிநிலை இப்போது நம்ம ஊர்த் தொலைபேசி எண் அளவுக்குக் குறுக்கப்பட்டு விட்டது!

ப்ளூட்டோ ஒரு கோள் அல்ல என்று எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, "காஸ்மிக்- ஏ' பட்டியலிலிருந்து ப்ளூட்டோவை உலகின் வானியல் அமைப்பு அகற்றிவிட்டதால்தான் இந்த நிலை.

1930-ல் கண்டுபிடிக்கப்பட்ட ப்ளூட்டோவுக்கு இப்போது 134340 ப்ளூட்டோ எனப் பெயர் சூட்டி, சூரியனைச் சுற்றிவரும் 1,36,562 விண்பொருள்களில் ஒன்றாக்கிவிட்டது பாரிûஸத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச வானியல் ஒன்றியத்தின் அங்கமான சிறு கோள்கள் மையம்.

செப். 7-ம் தேதி இறுதி செய்யப்பட்ட பட்டியலின்படி, ப்ளூட்டோவின் துணைக் கோள்களான சாரோன், நிக்ஸ், ஹைட்ரா ஆகியனவும் முறையே134340 ஐ, 134340 ஐஐ, 134340 ஐஐஐ என்ற எண்களாகிவிட்டன.

ப்ளூட்டோவை "கோளைப் போன்றதொரு சிறுகோள்' எனக் குறிப்பிட்டு, கோள்களின் பட்டியலிலிருந்து கடந்த மாதத்தில் எடுத்து விட்டது சர்வதேச வானியல் ஒன்றியம்.

இப்போது "கோளை போன்ற சிறுகோள்'களின் பட்டியலை உருவாக்குவதில் முனைந்திருக்கிறது இந்த அமைப்பு.

இப் பட்டியலில் ப்ளூட்டோவுடன் சிரிஸ் மற்றும் தொலைதூர விண்பொருளான 2003யுபி 313 (அதிகாரபூர்வமற்ற பெயர் ஸீனா) இடம் பெறும்.

சர்வதேச வானியல் ஒன்றியத்தின் மாநாடு நடைபெறும் வரை சூரியக் கோளின் பத்தாவது கோள் (!) என்பதாக முன்வைக்கப்பட்டு வந்தது "ஸீனா'.

இப்போது பத்து போனதுடன் ஒன்பதாவதுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

(சூரியனிலிருந்து மிகத் தொலைவில் -க்யூபெர் வட்டப் பகுதியில்- இருப்பதாலேயே ப்ளூட்டோவை அளவிட முடியாமல் இருந்து வந்தது.

1980-களில் "சாரோன்' என்று பெயரிடப்பட்ட -ப்ளூட்டோவின் இணைபொருளை ஜேம்ஸ் கிறிஸ்டி கண்டறிந்ததைத் தொடர்ந்து, இவற்றின் நிழல்களைக் (கிரகணங்கள்) கவனித்ததன் மூலம் ப்ளூட்டோவின் விட்டம் சுமார் 2252 கி.மீ. -பூமியுடைய நிலவின் விட்டத்தை விட சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைவு -என வானியலாளர்கள் அளந்தனர்).

"கோள் போன்றதொரு சிறுகோள்' என்பதற்கான வரையறை அறிவியல்ரீதியாக இல்லை; ப்ளூட்டோ பற்றிய முடிவு நியாயமற்றது' என்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர் "எதிர்' வானியலாளர்கள்.

கோள் என்பதற்கான வரையறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தை வலியுறுத்தும் வகையில் அடுத்த ஆண்டு மாநாடு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

76 ஆண்டு கால பெயரையும் புகழையும் இழந்த ப்ளூட்டோவுக்காக இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

நன்றி : தினமணி

ராகு காலம் பார்த்த Tamil Nadu முதல்வர்




நன்றி : Dinamalar

Cheeeeeeeeeeeee ...

தமிழர் கலாச்சாரமா? திராவிட கலாச்சாரமா?






Sunday, September 17, 2006

ச்சீசீய்ய்ய்ய்ய் .........

தமிழர் கலாச்சாரமா? திராவிட கலாச்சாரமா?






Powered by Blogger