Saturday, October 07, 2006

எந்தப் பலனும் எதிர்பாராமல் தி.மு.க. கூட்டணியில்

எந்தப் பலனும் எதிர்பாராமல் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் பேசினார்.

***************************************************************************
திருமாவளவன் குறித்த எமது முந்தைய பதிவுகள்.

Thuglak cartoon: திருமாவளவனின் தாவல் குறித்து
விடுதலை சிறுத்தைகள்-பா.ம.க லடாய்
எங்கிருந்தாலும் வாழ்க: J அறிக்கை
திருமாவளவனின் திருவிளையாடல் : Photo பதிவு
கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பற்றி திருமா. BBC க்கு அளித்த பேட்டி
***************************************************************************

சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேத்துப்பட்டில் அவர் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அதில் பேசியது:

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் திருப்தி தரும் வகையில் இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது.

பேரவைத் தேர்தலின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் விகிதாரசார அடிப்படையில் இடப்பங்கீடு அளிக்கப்பட்டது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் விகிதாரசார அடிப்படையில் ஒதுக்காமல் இடப்பங்கீடு அளிக்காமல் விடுதலைச் சிறுத்தைகளிடம் பாரபட்சம் காட்டப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டி வேட்பாளர்களாக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.தி.மு.க.வினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது எங்களது மானத்தை இழக்க நேரிட்டது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றார் தொல் திருமாவளவன்.

தகவல்: தினமணி

Friday, October 06, 2006

வூடு கட்டப்போறீங்களா? இதோ Housing tips !!!










சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதிய கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதன் எண்ணிக்கைக்கு இணையாக கட்டடவிதிமீறல் பிரச்சினைகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

புதிய வீடுகட்டும் அனைவரும் கட்டடவிதிகளை மீற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவது கிடையாது.

கட்டட விதிகள் என்ன? அவை எதற்காக உருவாக்கப்பட்டன? என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததே பல்வேறு விதிமீறல் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்.

புறநகர்ப் பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நில விற்பனை நடந்த காலம் மாறி தற்போது சதுர அடி கணக்கில் நில விற்பனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகளிலும் புதிய கட்டடங்களுக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்குழுமத்தின் சார்பிலேயே புறநகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளும் புதிய கட்டடங்களுக்கான அனுமதியை வழங்குகின்றன.

Click here for news about Bipasha Basu

புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது எப்படி: புதிய கட்டடங்கள் கட்ட தேவையான அனுமதி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் விவரம்:

(1) புதிய கட்டடத்துக்கான மாதிரி வரைபடத்தின் (புளூ பிரின்ட்) 5 பிரதிகள்.

(2) நிலத்தின் உரிமை உங்களிடம் உள்ளதை நிரூபிக்கும் நிலத்தின் பத்திரங்களின் நகல்.

(3) சி.எம்.டி.ஏ. வெளியிட்டுள்ள "பி' படிவம். (நிலத்தின் ஒரு பகுதியை தனியாக பிரித்து கட்டடம் கட்டினால் "ஏ' படிவத்தை அளிக்க வேண்டும்).

(4) நிலத்தை வீட்டுமனையாகப் பிரித்ததை உறுதிப்படுத்த அதன் "லேஅவுட்' பிரதி.

(5) புதிய கட்டடம் கட்டுவதற்கான செலவு மதிப்பீட்டுப் பிரதி.

(6) தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் நல நலநிதிக்கு கட்டடத்தின் மொத்த செலவு மதிப்பீட்டில் .03 சதவீதத்தை வரைவோலையாக (டி.டி.) அளிக்க வேண்டும்.

(7) லேஅவுட் வரைபட விண்ணப்பக் கட்டணம் ரூ. 10.

(8) கட்டட வரைபட விண்ணப்பக் கட்டணம் ரூ. 10.

(9) சரிபார்ப்புக் கட்டணம் ரூ. 2.

(10) விண்ணப்பப் பதிவுக் கட்டணம். (இது கட்டடம் மற்றும் நிலத்தின் பரப்பளவுக்கு ஏற்ப ரூ. 225 முதல் ரூ. 970 வரை வசூலிக்கப்படுகிறது).

(11) விண்ணப்ப பரிசீலனைக் கட்டணம். (இதுவும் கட்டடம் மற்றும் நிலத்தின் பரப்பளவின் அடிப்படையில் ரூ. 75 முதல் ரூ. 3,575 வரை வசூலிக்கப்படுகிறது).

(12) ஏற்கெனவே இருக்கும் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவதாக இருந்தால் அதற்கு பரப்பளவின் அடிப்படையில் சதுர மீட்டருக்கு ரூ. 55 முதல் ரூ. 90 வரை வசூலிக்கப்படுகிறது.

(13) புதிய கட்டட அனுமதி கட்டணம் பரப்பளவின் அடிப்படையில் 10 சதுர மீட்டருக்கு ரூ. 90 முதல் ரூ. 945 வரை செலுத்த வேண்டும்.

33 அடி அகலத்துக்கு சாலை உள்ள பகுதிகளில் தரைத்தளத்துடன் சேர்த்து 4 மாடி வரை மட்டுமே கட்ட வேண்டும்.

60 அடி சாலை உள்ள பகுதியில் மட்டுமே பலமாடி கட்டடங்கள் கட்டமுடியும்.

புதிய கட்டடங்கள் கட்டும்போது பின்பற்ற வேண்டிய விதிகளில் மிக முக்கியமான இவ் விதிமுறை குறித்து பலருக்கும் தெரியாமல் உள்ளது.

பிரச்சினை என்ன? சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரைதளம் மற்றும் முதல் மாடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு மாநகராட்சியும், புறநகர்ப் பகுதிகளில் அந்தந்தப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளும் சி.எம்.டி.ஏ. சார்பில் அனுமதி அளிக்கும்.

சென்னை மாநகராட்சி மட்டும் புதிய கட்டடங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான விதிகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் மாநகராட்சிப் பகுதிக்கும் புறநகர்ப் பகுதிக்கும் கட்டண விகிதங்களில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன என சிட்லபாக்கம் குடியிருப்போர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

புறநகர்ப் பகுதிகளில் நகராட்சிகளில் ஒரு விகிதத்திலும், ஊராட்சிகளில் ஒரு விகிதமாகவும் கட்டணம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய கட்டடங்கள் கட்டும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ள அலுவலகங்கள் எதிலும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் உள்ளது.

மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளிப்படையாக இல்லாததால், பல இடங்களில் விவரம் தெரியாமல் வருபவர்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பறிக்கப்படுகிறது.

இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்களால், உண்மையிலேயே அரசின் விதிகள் என்ன என்பது தெரியாமல் தங்கள் விருப்பம் போல் கட்டடங்களை கட்டும் பலர் பின்னர் கட்டட விதிமீறல் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இவ்வாறு, பிரச்சினைகளில் சிக்காமல் தப்பிக்க புதிதாக கட்டடம் கட்டுவோர் இதற்கான விதிமுறைகளை அந்தந்த அலுவலகங்களில் நேரில் சென்று கேட்டுப் பெற வேண்டும்.

இல்லாவிட்டால் வீடு கட்டுபவர்கள் பாதிக்கப்படுவதுடன் முறையாக விதிகளை கடைப்பிடித்து வீடுகட்டியுள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தகவல் : தினமணி

Thursday, October 05, 2006

Bangalore Airport ல் நடிகர் பிருத்விராஜ்க்கு நேர்ந்த கொடுமை!!!




மேலே உள்ள படத்தை click செய்து video-வை காணுங்கள்.

Update 1 :

சமூகநீதி அமைச்சகம் வேதனை: இச் சம்பவம் குறித்து மத்திய சமூகநீதி அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்று பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸôருக்கு அறிவுறுத்துமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் கூற அந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

""பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, அச் செய்தி உண்மையானதுதானா என்று உறுதி செய்யுமாறும்; உண்மையெனில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் எனது அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று சமூகநீதித் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த, ஊனமுற்றோர் நல ஆணையர் மனோஜ்குமார் கூறினார்.


-------------------------------------------------------------
Click here for News about Bipasha Basu

Dengue Fever : பிரதமர் மன்மோகன் பேரனுக்கு சிகிச்சை!!!

Dengue காய்ச்சல் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பேரன் ரோஹன், புதன்கிழமை தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அகில இந்திய மருத்துவ, அறிவியல் மைய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்தன.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் Dengue காய்ச்சல் இருப்பது தெரியவந்தது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

தகவல்: தினமணி

Tamil Magazine Thuglak Cartoon : திருமாவளவன் தாவல் !!!



திருமாவளவனின் திருவிளையாடலை காண ...இங்கே click செய்யவும்

Labels:


Wednesday, October 04, 2006

Google ஐ விலைக்கு வாங்கிட்டேன் !!!



இனி மேல் 'Google' என்பதற்கு பதிலா 'oosi aka pin' அப்படின்னுதான் தெரியும். நீங்களே www.google.com தளத்திற்கு இங்கே இருந்து போய் பாருங்களேன்.

Dinamani செய்தி : விடுதலை சிறுத்தைகள் - பா.ம.க லடாய் !!!

தி.மு.கவோடு கூட்டணி வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம், தற்போது திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை என்று பாமக கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் சித்தாமூர் ஆறுமுகம் புகார் தெரிவித்தார்.

புதன்கிழமை அவர் கூறியது:

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் இணைந்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற பாடுபடுவேன் என்று கூறினார்.

இதனால் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, அவர்களுக்கு உரிய மரியாதை தந்து, தேர்தலில் அவர்கள் விருப்பப்படி இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த மொளசூர், முன்னூர் ஆகிய ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் இயக்க மாவட்ட செயலாளர் சேரன், தனது சொந்த ஊரான கீழ் சித்தாமூரில் பா.ம.க வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6-வது வார்டில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளருக்கு எதிராக, அவரது உறவினர் ஒருவரை போட்டியிட செய்துள்ளார்.

மரக்காணம் ஒன்றியம் 25 வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சுகந்திக்கு எதிராக அவர் தனது மனைவி ஷீலாவை போட்டியிட செய்துள்ளார்.

இதுபற்றி பா.ம.கவினர், சேரனை சந்தித்து கேட்டபோது, திருமாவளவனின் அறிக்கை எங்களை கட்டுப்படுத்தாது. அவர் தி.மு.கவோடு கூட்டணி வைத்துள்ளதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர், பா.ம.க வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுகின்றனர். இதனால் தி.மு.க கூட்டணியில் இணைந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக பா.ம.க செயல்படும் என்றார் அவர்.

தகவல் : தினமணி

இன்றைய Politics Punch

"நான் தீவிரமான திமுககாரன். அதிமுகவை நடராஜனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிமுக வேஷம் போட்டேன். ஆனால், அது ஜெயலலிதாவிடம் பலிக்கவில்லை" (மதுரை ஆதீனம்)

"தேமுதிக வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் மதுரை தெருக்கள் முழுவதும் சோலார் விளக்குகள பொறுத்துவோம்" (விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம்)


தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

Tuesday, October 03, 2006

Flash News: Miss India International Kanksha Mehta Hijacked



போப்பின் பேச்சை கண்டித்து துருக்கிய விமானம் சற்று நேரத்திற்க்கு முன் கடத்தப்பட்டது. இந்த விமானத்தில் இந்திய அழகி Miss India International பட்டத்தை வென்ற Kanksha Mehta பயணம் செய்து கொண்டிருந்தார். பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.


மேலும் ...

Update : Hijackers Surrendered; Passengers released

Tamil Actor பிரபு அரசியலில் குதிக்கிறார் !!!


முறையான திட்டத்தோடு, முறைப்படி அறிவித்து விட்டு அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

நடிகர் திலகம சிவாஜி கணேசனின் 78வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. புதுவை முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் நடிகை வைஜெயந்தி மாலா, கவிஞர் வாலி ஆகியோருக்கு சிவாஜி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பழம்பெரும் இயக்குனர் பீம்சிங்கின் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

நகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகர் பிரபுவின் அண்ணனுமான ராம்குமார் பேசுகையில், புதுவையில் காமராஜர் ஆட்சி நடக்கிறது, தமிழகத்திலும் நல்லாட்சி நடந்து வருகிறது. இரு மாநிலத் தலைநகர்களிலும் எங்களது தந்தைக்கு சிலை வைத்துள்ளனர்.

சென்னையில் எங்களது தந்தைக்கு சிலை வைத்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது ஏன் என்று தெரியவில்லை. சிவாஜி இறந்து ஐந்து வருடங்கள் ஆனாலும் இன்னும் சிலர் எதிர்க்கிறார்கள் என்றால் அவருடைய சக்தி இன்னும் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.



எனவே, பிரபுவை ஏன் அரசியலில் இறக்கக் கூடாது என்று நினைக்கிறோம். ஐந்து ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டோம். இனிமேல் அப்படி இருக்க மாட்டோம். பிரபுவை அரசியலுக்கு அழைத்து வருவோம் என்றார்.

பின்னர் பிரபு பேசுகையில், எங்களது தந்தையுடன் பணியாற்றியவர்களுக்கு இங்கே மரியாதை செய்துள்ளோம். புதுவையில் சிலை வைத்த முதல்வர் ரங்கசாமிக்கும், நண்பனுக்கு கடற்கரையில் சிலை வைத்த தமிழக முதல்வர் கலைஞருக்கும் எங்களது நன்றிகள்.

இங்கே எனது தந்தையின் நண்பர்கள், ரசிகர்கள் பெருமளவில் திரண்டுள்ளீர்கள். அந்த தைரியத்தில்தான் அண்ணன் அவ்வாறு பேசினார். எல்லாம் நல்லதாக நடக்கும். நாங்கள் அரசியலுக்கு வரும்போது அதற்கான திட்டத்தோடு, முறைப்படி அறிவித்து விட்டு வருவோம் என்றார் பிரபு.

காங்கிரஸிலிருந்து முன்பு நீக்கப்பட்ட சிவாஜி பின்னர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஜானகி பிரிவு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலில் நின்றார். ஆனால் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் இந்தக் கூட்டணி தோல்வியுற்றது. அத்தோடு தனது அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுத்தார் சிவாஜி.

இந் நிலையில் சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபுவை அரசியலில் இறக்கி விட தீர்மானித்திருப்பது சிவாஜி மற்றும் பிரபு ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவீர்களா என்று பிரபுவிடம் பின்னர் செய்தியாளர்கள் கேட்டபோது, நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? சிவாஜி கணேசன் ரசிகர்கள் இன்னும் கூட ஆக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். சிவாஜி மன்றங்கள் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிவாஜியின் பிள்ளைகள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றார்.

சிவாஜி அரசியலில் தீவீரமாக இருந்தவர் என்றாலும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா வீட்டில் சம்பந்தம் செய்தாலும் அவரது வாரிசுகளான ராம்குமாரும், பிரபுவும் இதுவரை அரசியல் சாயம் பூசிக் கொள்ளாமலேயே இருந்து வந்தனர்.

இந் நிலையில், முறைப்படி அரசியலுக்கு வருவேன் என்று பிரபு கூறியுள்ளார்.

சிவாஜி ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருகிறோம் என்று பிரபு கூறுகிறார். ஆனால், சிவாஜிக்கே அந்த ரசிகர்களால் அரசியலில் வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை நம்பி என்று பொத்தாம் பொதுவாக பிரபு கூறினாலும் அவர் குறி வைப்பது முக்குலத்தோர் சமூக வாக்குகளை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர். இருந்தபோது இச் சமூக வாக்குகளை மொத்தமாக அள்ளி வந்தார். இதனால் சிவாஜிக்கே அவர் சார்ந்த முக்குலத்தோரின் ஆதரவு கிடைக்கவில்லை.

சிவாஜி சாதிக்க முடியாததை பிரபு சாதிப்பாரா? முக்குலத்தோர் வாக்குகளை தன் பக்கம் திருப்ப பிரபுவால் முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கார்த்திக்கை நம்பி 'மோசம் போனதாக' கருதும் முக்குலத்து இளைஞர்களுக்கு பிரபுவின் எண்ட்ரி ஒருவேளை புதிய உத்வேகத்தைத் தரலாம்.

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

Monday, October 02, 2006

Vijaykanth சூளுரை : கொசுவை ஒழித்து கட்டுவேன்

எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் ஒரே ஆண்டில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டேன்.

நான் தனித்து நிற்பதுபோல் மற்ற கட்சிகளும் போட்டியிட தயாரா என்று கேட்டேன் யாரும் பதில் சொல்லவில்லை.

இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - திமுகவுக்கு மாற்றாக எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவே வந்துள்ளேன்.

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஒரே ஆண்டில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுவேன். தவறு என்றால் ஒப்புக் கொள்வேன்.

மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் தரமானதாக மாற்றிக் காட்டுவேன்.

ஆளும் கட்சியாக வந்தால்தான் மாநகராட்சிக்கு நிதி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். மாநகராட்சிக்கு என்று தனி நிதி இருக்கிறது.

மத்திய அரசு தரும் நிதியும் இருக்கிறது.

நூற்றுக்கு நூறு என்று டி.வி.யில் விளம்பரம் செய்கிறார்கள். மக்கள் அப்படி சொல்லவில்லை. டி.வி. விளம்பரத்துக்கு கொடுக்கப்படும் பணம் நமது வரிப்பணம்.

காட்டு யானையைத்தான் நாம் பார்க்கவேண்டும். சின்ன முயலைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்கிறீர்கள்.

நீங்களும் முயலாகவும் எலியாகவும் பூனையாகவும் இருந்ததை யோசித்துப் பாருங்கள். சின்னத்தை முடக்கிய பின்னரும் நாங்கள் தனித்து நிற்கிறோம். நீங்கள் சின்னம் இல்லாமல் நிற்க தயாரா?

எனக்கு மக்கள்தான் எஜமானர்கள். திமுகவும் அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் என்று பட்டாப் போட்டு கொடுக்கவில்லை. அவர்கள்தான் ஆட்சிக்குத் தொடர்ந்து வரவேண்டுமா?

உண்மையைப் பேசினால் என்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்கிறார்கள். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு எனவே உண்மையைச் சொல்ல அஞ்சமாட்டேன் என்றார் விஜயகாந்த்.


தகவல் : தினமணி

இன்றைய Politics Punch

"தேர்தலில் என் மனைவியை நிறுத்த மாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனால், ஊர் மக்கள் கூடி வந்து என்னை வற்புறுத்தினர்; அதனால் இசைந்தேன். மக்களின் ஆசைக்கிணங்க மறுபடியும் இந்த முள் கிரீடத்தை சுமக்க தயாராக இருக்கிறோம் " (ஊராட்சித் தேர்தலில் தனது மனைவியை நிறுத்தியுள்ள மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் சொன்னது)

"தமிழக அரசியலில் இந்த திருமாவளவனைப் போல் நெளிந்து, நெகிழ்ந்து அரசியல் செய்யும் நபர் யாருமில்லை. என்னாலேயே அதிமுகவில் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால், அந்த அவமானங்களின் தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள் " (திருமாவளவன்)

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

Powered by Blogger