Saturday, December 09, 2006

Vaiko Interview in CNN IBN : Video - Part 2


Vaiko Interview in CNN IBN : Video - Part 1


Friday, December 08, 2006

Vijaykanth : தமாசு !!!

சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அங்குள்ள செய்தியாளர்கள் அறைக்கு அமைச்சர்களோ அல்லது எம்எல்ஏக்களோ திடீரென வந்து நிருபர்களிடம் கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டுப் போவது வழக்கம்.

மிக கேசுவலாக, ஆப்தரெக்கார்டாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டு போவார்கள்.

அதே போல சட்டசபைக்கு புதியவரான விஜய்காந்தும் பிரஸ் ரூமுக்குள் வந்தார். அவரை நல்லபடியாகவே வரவேற்றனர் நிருபர்கள். அப்போது அவரிடம் ஒரு நிருபர், தமிழகத்தின் சட்டம்ஒழுங்கு எப்படி இருக்கு என்று 'எதார்த்தமாக' கேட்டார்.

இதற்கு 'பதார்த்தமாக' ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம் அல்லது சீரியஸாகவாவது ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டவர் மீதே பாய்ந்தார் விஜய்காந்த். (நிருபர்கள் மீது விஜய்காந்த் பாய்வது இது புதிதல்ல என்பது வேறு விஷயம்)

இப்படி எங்கிட்ட கேள்வி கேட்க உங்களுக்கு வெக்கமாயில்லையா? நான் ஒரு பத்திரிக்கை நடத்தி ஒரு விஷயத்தை எழுத முடியாத நிலை இருந்தா, அந்த பத்திரிக்கைøயையே நிறுத்திடுவேன் என்று சினிமா டயலாக் மாதிரி சம்பந்தமே இல்லாமல் பேசினார்.

சும்மா இருந்த தங்களை தேடி வந்து வெட்டியாக திட்டிய விஜய்காந்தை 'ரவுண்டில் விட' நினைத்த இன்னொரு நிருபர், நீங்க சட்டசபைக்கு குடிச்சிட்டு வர்றதா ஜெயலலிதா சொல்றாங்களே, என்றார்? அதான்.. பக்கத்துல இருந்து ஊத்தி குடுத்தீங்களானு கேட்டுட்டேனே. அப்புறம் என்ன? என்று அவரை முறைத்தார்.

அதெல்லாம் சரி, நேரடியா ஏதாவது பதில் சொலுங்க.. என்று நிருபர்கள் கேட்டவே, ஜெயலலிதா இப்படி பேசுனதுக்காக மக்கள் என்ன போராட்டமா நடத்துறாங்க? என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினார் விஜய்காந்த்.

உங்கள ஜெயலலிதா திட்டுனதுக்கு மக்கள் ஏதுக்கு போராட்டம் நடத்தனும், நீங்க தானே நடத்தனும் என்று ஒரு நிருபர் மடக்கவே என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.

சரி விடுங்க, நீங்க போதையில சட்டசபைக்கு வர்றதுண்டா என்று விடாமல் இன்னொரு நிருபரும் கேட்கவே, என்ன பேசுறீங்க? யாரையும் நம்பி நான் இல்ல என்று டென்சனாகி மீண்டும் கோபமானார்.

நாங்க கூப்பிட்டோமா, நீங்களா தானே பிரஸ் ரூமுக்குள்ள வந்தீங்க.. சாதாரணமா தானே கேள்வி கேட்டோம், கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடிஞ்சா சொல்லுங்க.. இல்லாட்டி கிளம்பி போயிட்டே இருங்க, இங்க வந்துட்டு எங்களை என்ன திட்றது என்று நிருபர்கள் பிலுபிலுவென பிடித்துக் கொள்ளவே, வாயை குடுத்து மாட்டிக்கிட்டோமா என்று வடிவேலு மாதிரி பம்மி அங்கிருந்து மெதுவாக வெளியேறினார் விஜய்காந்த்.

'அக்ரி'யின் அக்லி பேச்சு:

சட்டமன்றத்தில் அதிமுகவின் முக்கிய எம்எல்ஏக்களில் ஒருவரும் சசிகலா குடும்பத்துக்கு ரொம்ப வேண்டியவருமான 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியின் சீட் திடீரென மாற்றப்பட்டது. அந்த சீட் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ சண்முகத்துக்கு ஒதுக்கப்பட்டது.

இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பனின் நிருபர்கள் கேட்டபோது,

பெண் எம்எல்ஏக்களுக்கு அருகில் அமர்ந்திருந்த 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசுவதாகவும், தங்களை கிண்டல் செய்வதாகவும், கெட்ட வார்த்தையெல்லாம் பேசுவதாகவும் பெண் எம்எல்ஏக்கள் புகார் தந்ததனர். இதனால் தான் அவரை இடம் மாற்ற வேண்டியதாகிது என்று உண்மையை வெளியில் சொன்னார்.

இதனால் சபாநாயகர் மீது கடுப்பில் இருக்கும் 'அக்ரி' அதை முல்லைப் பெரியாறு தொடர்பான விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது காட்டினார்.

அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, 'அக்ரி' மட்டும் சபாநாயகர் ஒழிக என்று தனியே சவுண்டு விட்டார்.

இதைப் பார்த்த சபாநாயகர் ஆவுடையப்பன் சிரித்தபடியே, நேற்றைய கோபத்தின் (சீட் மாற்றியதற்கான காரணத்தைச் சொன்னது) எதிரொலியோ? என்று கேட்டவே அக்ரியைப் பார்த்து சட்டமன்றமே சிரித்தது.

Source: Thatstamil.com

Thursday, December 07, 2006

Tamil Magazine Thuglak Cartoon: சிபு சோரன்



எமது முந்தைய Thuglak Cartoon பதிவுகளை காண இங்கே சுட்டவும்.

Labels:


Google Adsense Report


Grandma stops train with Red Saree !!!

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததைப் பார்த்த பாட்டி தான் அணிந்திருந்த சிவப்பு வண்ண சேலையை காட்டி ரயிலை நிறுத்தினார்.

மாராபட்டு என்ற இடத்தில் சுரேஷ், தினகரன் ஆகியோர் இன்று காலை தண்டவாளம் பக்கமாக நடந்து சென்றபோது அதில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த நேரத்தில் தூரத்தில் Trivandrum Super Fast Express வந்து கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞர்கள் தவித்தபோது அந்த வழியாக சிவப்பு சேலை அணிந்த ராணி (வயது 63) என்ற முதிய பெண் வந்தார். அவரிடம் விஷயத்தைக் கூறியவுடன், உடனே தனது சேலையை காட்டியபடி தண்டவாளத்தின் அருகே ரயில் வரும் திசையில் ஓடினார்.

இதைப் பார்த்த என்ஜினின் டிரைவர் ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து ரயிலை அவசரமாக நிறுத்தினார். இதையடுத்து அந்த வழியாக வந்த எல்லா ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ரயிலை நிறுத்த பாட்டிக்கும், அந்த இளைஞர்களுக்கும் ரயில் டிரைவரும் பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.

Source: Thatstamil.com

Wednesday, December 06, 2006

இன்றைய Politics Punch !!!

"(கருணாநிதியை மறைமுகமாகக் குறிப்பிட்டு ) கடைசி காலத்துல மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிட்டு போறத விட்டுட்டு, ஏன் இப்படி ஆணவம் அராஜகம் பண்றீங்க? நான் காந்தியா இருக்கறதும், நேதாஜியாக மாறுறதும் உங்க கைல தான் இருக்குது " (விஜய்காந்த் 'வசனம்')

Sunday, December 03, 2006

Jothika in her new Job !!!

சூர்யாவுடன் குடித்தனத்தை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா புது அவதாரம் எடுத்துள்ளார். அதாவது சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை கேட்கும் வேலையை அவர்தான் மேற்கொள்கிறாராம்.



ரொம்ப நாளாக சத்தமே போடாமல் காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் மண வாழ்க்கையில் புகுந்து அம்சமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இனிமேல் நடிக்க மாட்டேன் என ஜோதிகா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இருந்தாலும் சினிமாவுடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவுடன் ஒட்டி உறவாடித்தான் வருகிறார். சூர்யாவிடம் கதை சொல்ல வருகிறவர்களை ஜோதிகாதான் சந்தித்து கதை கேட்கிறாராம்.

எனவே சூர்யாவை புக் பண்ண விரும்புகிறவர்கள் முதலில் ஜோ.வைத்தான் பார்க்கிறார்கள். அவரிடம் கதை சொல்லி, ஜோதிகா ஓ.கே. சொல்லி விட்டால் சூர்யா கால்ஷீட் கிடைக்குமாம்.

இதேபோல சூர்யா நடிக்கும் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்தும் ஜோதிகாவிடம் ஆலோசனை கேட்டு விட்டே இயக்குநர்கள் ஹீரோயின்களை ஃபிக்ஸ் செய்கிறார்களாம். சூர்யாவின் கால்ஷீட்டையும் ஜோதிகாவை நிர்வகிக்க ஆரம்பித்துள்ளார்.

சில்லுன்னு ஒரு காதல் படம் சரியாக போகாததால் அப்செட் ஆன சூர்யாவை, ஜோதான் சமாதானப்படுத்தினாராம். அடுத்த படத்தில் பின்னிடுவீங்க பாருங்க என்று ஆறுதல் கூறினாராம். அந்தப் புத்துணர்வில் கௌதமின் வாரணம் ஆயிரம் படத்தில் அடித்துத் தூள் கிளப்ப சூர்யா ரெடியாகி வருகிறாராம்.

வாரணம் ஆயிரம் என ஏன் பெயர் வைத்தீர்கள் என்று கௌதமிடம் கேட்டேபாது, வாரணம் என்றால் யானை என்று பொருள். எனது நாயகனும் ஆயிரம் யானைகளின் பலத்தை கொண்டவன். அந்த அர்த்தத்தில்தான் வாரணம் ஆயிரம் என பெயர் சூட்டினேன் என்கிறார் கௌதம்.

வாரணம் ஆயிரம் படத்தில் அம்சமான ஆண்ட்ரியாதான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவரைப் பரிந்துரைத்ததும் ஜோதானாம்.

சூர்யாவை இன்னும் ஷேப் செய்ய ஜோ.வின் இந்த புதிய 'ஜாப்' உதவட்டும்!

Powered by Blogger