Saturday, October 21, 2006

Tamil Comedian T Rajendar


Friday, October 20, 2006

மராத்திய விவசாயிகளுக்கு உதவிய Google Maps!!!



விளை நிலங்களை அடிமட்ட விலைக்கு வாங்க முயற்சித்த மராட்டிய அரசை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு Google Maps எவ்வாறு உதவியது என்று பாருங்கள்.

Related Post:

Google Maps + Yahoo Traffic Report

Thursday, October 19, 2006

List of Tamil Films acted by Actress Srividya


Aanandham
Aasai Aasaiyaai
Aboorva Ragangal
Apoorva Sagotharargal
Deiva Vaaku
Ilayavan
Janaa
Kadhal Kavithai
Kaadhalaa Kaadhalaa
Kalamellam Kathiruppen
Kamaraasu
Kandukondain Kandukondain
Kaadhalukku Mariyaadhai
Kandukonden Kandukonden
Kannukkul Nilavu
Karpoora Mullai
London
Maappillai
Nilave Mugam Kaattu
Nenje Nenje
Savaal
Sangamam
Sigamani Ramamani
Sree
Star
Thalapathi
Ullaasam
Unnai Thedi
Uyirodu Uyiraaga

பிழை இருந்தால் Comments மூலம் தெரியபடுத்துங்கள்.

Actress Srividya dies of Heart Attack !!!

நடிகை ஸ்ரீவித்யா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.
நடிகை ஸ்ரீவித்யா கடந்த சில வருடங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். தமிழ் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு மலையாள படங்களிலும்

டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு நோய் தீவிரமடைந்ததால் திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ உத்ராடம் திருநாள் தனியார் Hospital லில் சேர்க்கப்பட்டார்.



கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் அவரை பார்த்தார். நேற்று மாலை ஸ்ரீவித்யாவின் உடல் நிலை மோசமடைந்தது. இரவு 8 மணிக்கு ஸ்ரீவித்யாவின் உயிர் பிரிந்தது.
இன்று மாலை அவரது உடல் திருவனந்த புரத்தில் அடக்கம் செய்யப் படுகிறது.
பிரபல carnatic இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரியின் மகளான ஸ்ரீவித்யா , தமிழில் திருவருட் செல்வர் என்ற படத்தில் அறிமுகமானார். அபூர்வராகங்கள் படத்தின் மூலம் அவரது புகழ் உயர்ந்தது. பல மொழிகளில் 900 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

Related Posts:
Kamal Visits Srividya at the Hospital
Srividya Admitted in Hospital

Source: Dinakaran

Aishwarya Rai : விதியின் கைகளில் என் திருமணம்

விதிப்படி என் திருமணம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன் என்று முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கூறினார்.




எனக்குத் திருமணம் என்பது கண்டிப்பாக நடக்கும். ஆனால், அது எப்போது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். அபிஷேக் நல்ல நண்பர். அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் என்றார் அவர். அவரது முக பாவனையில் இருந்து அவரது மனநிலையை அறியமுடியவில்லை.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த புதிய கைக்கடிகாரம் அறிமுக விழாவின் இடைவெளியின்போது நிருபர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

Related Post:

Aishwarya and Abhishek in Madurai

தகவல்: தினமணி

Chennai Silks Demolition : மேலும் 4 தளங்கள் காலி!!!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 4 மாடிகளை இடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபலமான சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7 மாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டத்தின் பூமிக்கடியில் உள்ள தரைத் தளம் உள்ளிட்ட 4 தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் குற்றம் சாட்டியது.

அனுமதியின்றி கட்டப்பட்ட நான்கு தளங்களையும் இடிக்கவும் அது முடிவு செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது சென்னை சில்க்ஸ். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 4 மாடிகளையும் இடிக்கலாம் என அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சேமா, பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.

அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என்று கூறிய நீதிபதிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 தளங்களையும் இடிக்க உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இதே கட்டத்திற்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்திலும் அனுமதியின்றி 3 தளங்களை கட்டியிருந்தனர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார். அந்த தளங்களையும் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

Related Post :
Chennai Silks தப்பிக்குமா?



தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Wednesday, October 18, 2006

Internet ல் பணம் சம்பாதிக்க Google Adsense தவிர பிற Network list !!

Internet ல் பணம் சம்பாதிக்க நிறைய பேர் Google Adsense விளம்பரங்களை தங்கள் Blog களில் இடம் பெற செய்திருப்பதை கவனித்திருப்பீர்கள். இதோ இங்கே Google Adsense போல் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்க மேலும் நிறைய Network தொகுப்புகள்.

Primarily CPM Based Ad Networks



Primarily CPA/CPL Ad Networks



Primarily CPC AND/OR Text Based/Contextual Ad Networks



Shopping/Comparison Networks



“Non-Standard” Ad Networks (PopUps, Expandables, Pay Per Post, etc.)



Specific Demographic Ad Networks



NON-US Primarily CPM Based Ad Networks



NON-US Primarily CPC AND/OR Text Based/Contextual Ad Networks



NON-US Primarily CPA/CPL Ad Networks



Guruji.com - Exclusive India based Search Engine !!!

இதோ வந்து விட்டது ஒரு search engine இந்தியாவிலிருந்து... www.guruji.com


இரண்டு முன்னால் IIT மாணவர்களின் முயற்சி இது.




புதிதாக தொடங்கப்பட்டுள்ளதால் இன்னும் எல்லா வலைதளங்களும் database ல் சேர்க்க படவில்லை ஆனால் நீங்கள் தேடும் சொற்களுக்கு match கிடைத்தால் results அதிவேகமாக வருகிறது. இந்திய வலைதளங்கள் மட்டுமே இதில் இடம் பெறும் என்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.

Real estate boom in chennai
Bosch Launches new facility in coimbatore

Tuesday, October 17, 2006

அதிமுக ஒரு வைரம் - ஜெயலலிதா


"அறுக்க அறுக்க வைரம் மின்னுமே, அதைப் போல கழகம் வலுவோடும், பொலிவோடும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. " (ஜெயலலிதா)

செய்தி: தட்ஸ்தமிழ்.காம்

பழைய செய்திகள் :
1. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 69 தொகுதிகள் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது.
2. சென்ற வாரம் நடைபெற்ற மதுரை இடைதேர்தலில் தேமுதிக வை விட 3000 வாக்குகள் மட்டுமே பெற்று அதிமுக அதிகம் பெற்று 2ம் இடத்தை பிடித்தது.

அண்ண்னுக்காக Singapore லிருந்து வந்து வாக்களித்த தம்பி!!!

அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அண்ணனுக்காக Singapore லிருந்து வந்து தம்பி வாக்களித்தார்.

சத்தியமங்கலம் அருகேயுள்ளது அரியப்பம்பாளையம் பேரூராட்சி. 15 வார்டுகள் உள்ள பேரூராட்சியில் 9-வது வார்டில் தேமுதிக சார்பில் கே.ரத்தினசாமி போட்டியிடுகிறார். இவரது தம்பி கே.வெங்கிடுசாமி. Singapore ல் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 9-வது வார்டில் வாக்கு உள்ளது.

1 வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றி மாறலாம் எனக் கருதி வெங்கிடுசாமி Singapore லிருந்து வெள்ளிக்கிழமை சத்தியமங்கலம் வந்து அண்ணனுக்காக வாக்களித்தார்.

தகவல்:தினமணி

Monday, October 16, 2006

Tamil Film Director பாராதிராஜா மகன் மனோஜ் காதல் திருமணம் !!!



இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் நவம்பர் 19ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.

தாஜ்மஹால் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் மனோஜ். அதேபோல சக்ஸஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்தனா. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்துள்ளனர்.

இருவரும் இணைந்து சாதுர்யன் என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவெடுத்தனர். முடிவை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தபோது, இரு தரப்பிலுமே ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும் மனோஜும், நந்தனாவும் உறுதியாக இருந்ததால் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர். இதையடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது அடுத்த மாதம் 19ம் தேதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இரு குடும்பத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மனோஜ் தரப்பில் பாரதிராஜா, அவரது மனைவி சந்திரலீலா ஆகியோர் திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

Source: thatstamil.com

Rajini Kanth பேச்சு : துண்டை அடகு வைக்கலாம்; ஆனால் வேட்டியை ...

"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 2-ம் பாகத்தை எடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 100 வது நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.



விழாவுக்குத் தலைமைதாங்கி ரஜினிகாந்த் பேசியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த "சரஸ்வதி சபதம்' படம் வெளியானது. அதில் கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எது சிறப்பானது என்ற போட்டி வரும். இறுதியில் மூன்றும் முக்கியம் என்ற கருத்து சொல்லப்பட்டது.

இப் படத்தைப் பொறுத்தவரை கதை, எழுதி இயக்கிய சிம்புதேவன் கல்வியையும், பணம் போட்ட ஷங்கர் செல்வத்தையும், தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய வடிவேலு வீரத்தையும் நினைவுபடுத்துகிறார்கள். இந்த மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்ததால் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இப் படத்தின் முதல் பாராட்டு செல்வத்தை வழங்கிய தயாரிப்பாளர் ஷங்கருக்குத்தான். ஏனென்றால் சிம்புதேவன் சொன்ன மூன்று கதைகளை கேட்டுவிட்டு, இக் கதையைத் தேர்ந்தெடுத்து அதை நம்பி பணம் போட்டதற்காக அவருக்குத்தான் முதல் பாராட்டு.

அவர் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல; நல்ல தயாரிப்பாளரும் கூட. இப் படம் தயாரான பிறகு படத்தை வெளியிடுவதற்காக ஷங்கர் மிகவும் சிரமப்பட்டார். அதற்காக அவருடைய வீட்டை அடமானம் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஷங்கருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒரு சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம்; ஆனால் வேட்டியை அடகு வைத்துவிடக் கூடாது.

அன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலசந்தர் படங்கள் எல்லாம் உடனடியாக வியாபாரம் ஆகிவிடும். ஆனால் சின்ன வயதிலேயே ஷங்கர் படங்கள் தமிழகம் தாண்டி இந்தியா முழுக்க உடனடியாக வியாபாரம் ஆகிறது.

அதற்குப் பின்னால் அவருடைய கடுமையான உழைப்பும், நேரத்தை அவர் பயன்படுத்தும் விதமும் அடங்கியிருக்கிறது. ஷங்கரைப் பற்றி இன்னும் விரிவாக "சிவாஜி' வெற்றி விழாவில் பேசுகிறேன்.

அதேபோல் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் இயக்குநர் சிம்புதேவன். இந்தக் காலத்தில் சரித்திரப் பின்னணியோடு கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்கு மிகச் சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அவரிடம் 100 படங்களை இயக்கிய அனுபவம் தெரிகிறது.

இது வெறும் நகைச்சுவைப் படம் மட்டுமல்ல; சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளையும் உள்ளடக்கிய படம். குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் 10 கட்டளைகள் சம்பந்தப்பட்ட காட்சி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதுபோன்ற படங்களை அவர் இயக்க வேண்டும். ஏன் இதே கூட்டணி இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

இப் படத்துக்கு ஆணிவேர் போன்றவர் நடிகர் வடிவேலு. சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்துத்தான் அவரை "வீரபாண்டிய கட்டபொம்மன்', "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்' போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். நாகேஷின் நடிப்பைப் பார்த்து "சர்வர் சுந்தரம்', "நீர்க்குமிழி', "எதிர் நீச்சல்' போன்ற படங்கள் அமைந்தன.

அதுபோலத்தான் வடிவேலுவுக்கு "இம்சை அரசன்...' படம் அமைந்துள்ளது. காலத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டு படிப்படியாக முன்னேறியவர். அதுபோல தொழிலில் அர்ப்பணிப்பும், மற்றவர்களிடம் மரியாதையும் காட்டுபவர் என்றார் ரஜனிகாந்த்.

Powered by Blogger