Saturday, September 30, 2006

Tamil Actress Srividya in Hospital - Advanced Cancer

Srividya passes away

நடிகை ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார்.



ஸ்ரீவித்யா கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் எங்கும் காண முடியவில்லை. படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மலையாள டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்த அவர் அதிலிருந்தும் விலகி விட்டார். அத்தொடரும் நிறுத்தப்பட்டு விட்டது.

Click here for India Movie News

சென்னையைக் காலி செய்து விட்டு கேரளாவுக்கு இடம் பெயர்ந்த ஸ்ரீவித்யாவுக்கு என்ன ஆனது என்பதே தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் ஸ்ரீவித்யா, உடல் நிலம் மோசமாகி கேரளாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது. ஆனால் எந்த மருத்துவமனை என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அந்த விவரம் தெரிய வந்துள்ளது.



கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் ஸ்ரீவித்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், அது உச்சத்தை அடைந்திருப்பதாகவும், இதனால் அபாய கட்டத்தில் ஸ்ரீவித்யாவின் உடல் நலம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீவித்யாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கணவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்ட ஸ்ரீவித்யா, உற்றார், உறவினர்களுடனும் சேராமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்.

தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீவித்யாவுக்கு மலையாள நடிகரும், எம்.எல்.ஏவுமான கணேஷ்குமார்தான் உதவியாக இருந்து வருகிறார். ஸ்ரீவித்யாவின் நிலை குறித்து கணேஷ்குமார் கூறுகையில், ஸ்ரீவித்யா எனக்கு தாய் போன்றவர். அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. அவரைக் காப்பாற்ற கடுமையாக முயன்று வருகிறோம் என்றார்.

Courtesy : Thatstamil.com

Friday, September 29, 2006

Pondichery to Puducherry - அக்டோபர் 1 முதல்


வரும் ஞாயிற்றுக் கிழமையில் இருந்து (அக்டோபர் 1) பாண்டிச்சேரி என்ற பெயர் மாற்றப்பட்டு புதுச்சேரி என்று வழங்கப்படும்.

"பாண்டிச்சேரி (பெயர் மாற்றம்) சட்டம் 2006' அந்த தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Dinamani

வருகிறது Election விபூதி !!! வாக்காளர்களே உஷார்!!!

கடலூர் மாவட்டம் பூதம்பாடி கிராமத்தில் வாக்காளர்களை மயக்க விபூதியுடன் வசிய மருந்தைக் கலந்து அதை குடிநீரில் கலந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.


கடலூர் மாவட்டம் பூதம்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் விஜயா என்பவரும், அதிமுக சார்பில் மணிமேகலை என்பவரும் போட்டியிடுகின்றனர்.

இரு கட்சியினரும் வாக்காளர்களைக் கவர தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதில் ஒரு அணியினர், மக்களை மயக்கி வாக்குகளைப் பெற மந்திரிவாதியின் உதவியைக் கோரியுள்ளதாக பீதி பரவியுள்ளது.

இந்த அணியினர் அங்குள்ள மேல் நிலைக் குடிநீர் தொட்டியில் வசிய மருந்து கலக்கப்பட்ட விபூதியை தண்ணீரில் கலந்து விட்டதாகவும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதை உறுதிப்படுத்துவது போல நேற்று காலை இங்குள்ள குடிநீர்க் குழாய்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்தபோது, தண்ணீர் வித்தியாசமான வண்ணத்தில் இருப்பதையும், அதில் விபூதி வாசம் வருவதையும் பார்த்து பயந்து போயினர்.

Click here for India Movie News

மக்கள் மனதை மாற்றி வாக்குகளைப் பெற வசிய மருந்தை கலந்து விட்டதாக எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. தண்ணீரை ஒரு பாட்டிலில் பிடித்து போலீஸாரிடம் கொடுத்தனர்.

சம்பந்தப்பட்ட தொட்டியிலிருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டது. பின்னர் பிளீச்சிங் பவுடர் அடித்து தொட்டியை சுத்தப்படுத்திய பின்னர் மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது.

இந்த சம்பவம் பூதம்பாடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

Thursday, September 28, 2006

திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க: J அறிக்கை




விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 பேரவைத் தேர்தலில் திமுக சின்னத்தில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொல் திருமாவளவன், திமுக-வுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக அதிலிருந்து விலகி அதிமுக அணியில் இணைந்தார்.

இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து தேர்தலைச் சந்தித்தது.

சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். சட்டப் பேரவையில் திமுகவுடன் இணக்கமான போக்கையே அவர்கள் மேற்கொண்டனர். இலவச கலர் டி.வி. வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் அக்கட்சியின் உறுப்பினர் செல்வம் பங்கேற்றார்.

இருப்பினும் ஆளும் திமுகவை எதிர்த்து முதலாவதாக அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்திலும், அண்மையில் சிக்குன் குனியா நோயைக் கட்டுப்படுத்த தவறியதற்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் ஜெயலலிதாவுடன் இணைந்து திருமாவளவன் பங்கேற்றார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பேச்சு நடத்தி அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இடங்களும் ஒதுக்கப்பட்டன.

""போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும், இருப்பினும் ஒதுக்கப்பட்டதை திருப்தியோடு ஏற்றுக் கொள்வதாக,'' திருமாவளவன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென புதன்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்ததோடு, அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியை அறிவாலயத்தில் அவர் சந்தித்தார். இதனடிப்படையில் திமுக போட்டியிடும் இடங்களில் சில விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க. சகோதரி என்ற முறையில் அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான்: ""ஆத்திரமும் அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது''.

Courtesy : Dinamani

Tamil Magazine Thuglak Cartoon : கலைஞர் - ராமதாஸ் கூட்டு கொள்ளை !!!

Labels:


Wednesday, September 27, 2006

Madurai Election : 'முரசு' சின்னம் பெற்றது தே.மு.தி.க


திருமாவின் திருவிளையாடல் - Photo பதிவு.

8-மாதங்கள் முன்பு வரை ...


3-மாதங்களுக்கு முன்பு ...


அட சென்ற வாரம் ....



இன்று ....



நாளை ???????


கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பற்றி திருமா. BBC க்கு அளித்த பேட்டி


படங்கள் உதவி : தினமலர், The Hindu, Rediff.com மற்றும் திருமாவளவன்.

Tuesday, September 26, 2006

துணை நகரம் அமையும் : முதல்வர் அறிவிப்பு !!!




நன்றி : தினமலர்

Top 10 Heriones & Top 10 Directors of Tamil Movie Industry!!!

கோலிவுட்டில் வெற்றி வாகை சூடி உலா வரும் Top 10 Heriones மற்றும் Top 10 Directors இதோ ...

Top Heroines
10. பூஜா
9. சோனியா
8. நமிதா
7. ஸ்னேகா
6. ஸ்ரேயா
5. பாவனா
4. நயனதாரா
3. ஜோதிகா
2. அசின்









1. திரிஷா




Top Directors
10. விஷ்ணுவர்தன்
9. சேரன்
8. தரணி
7. முருகதாஸ்
6. கெளதம்
5. பாலா
4. K.S. ரவிகுமார்
3. செல்வராகவன்
2. சங்கர்












1. மணிரத்னம்

இந்த விவரங்களை நான் கண்டது தென்னவன் பதிவில். அவர் Behindwoods தளத்தில் இருந்து சேகரித்து இருந்தார்.

Tamil Daily மாலைமலர் துவங்கும் FM Radio !!!



தகவல் : தினமலர்.

Sexiest Asian Male - யாரு தெரியுமா? இதோ லேட்டஸ்ட் survey


Monday, September 25, 2006

Chennai IT நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!!

சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (ஐ.டி) திங்கள்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

போலீஸ் சோதனையில் அதுவெறும் புரளி என்பது தெரியவந்தது.

சென்னை தி.நகரில் ஜிஆர்டி ஓட்டலுக்கு எதிரே தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.) உள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலக உதவி மேலாளரின் செல்போனில் காலை 9.30 மணிக்கு அழைப்பு வந்தது.

அதில், பேசிய நபர் ஐ.டி. நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், காலை 10.30 மணியளவில் அது வெடிக்கக் கூடும் எனக் கூறினார்.

இதுகுறித்து, தி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

1 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தினர். இறுதியில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.


தகவல் : தினமணி

கட்சியில் இருந்து கார்த்திக் நீக்கம் !!!

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரும், பொதுச் செயலாளருமான நடிகர் கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.



இதுகுறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் (பிஸ்வாஸ் பிரிவு) பொதுச் செயலாளர் தேவராஜன் கூறுகையில்,

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக நடிகர் கார்த்திக் நியமிக்கப்பட்ட பின்னர், கட்சியின் மத்தியக் குழு கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அவர் நடைமுறைப்படுத்தவில்லை.

கட்சித் தொண்டர்களை சந்திப்பதும் இல்லை. மேலும் கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகவும் செயல்பட்டு வருகிறார். கட்சியை அவரால் வழி நடத்த முடியவில்லை.

தமிழகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இதனால் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் கார்த்திக்கை நீக்க கட்சியின் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

மதுரையில் அடுத்த மாதம் 28, 29ம் தேதிகளில் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெறுக்கிறது. இதில் புதிய மாநில குழு அமைக்கப்படும். கார்த்திக்கால் கட்சியில் ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும். கட்சியினர் யாரும், கார்த்திக்குடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தான் பிஸ்வாஸ் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக கார்த்திக் நியமிக்கப்பட்டார். அதுவரை தலைவராக இருந்த சந்தானத்தை பிஸ்வாஸ் நீக்கினார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என பிஸ்வாஸ் கூற, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றார் கார்த்திக்.

ஆனால், பிஸ்வாஸை கூட்டிக் கொண்டு போயஸ் கார்டனுக்குப் போன கார்த்திக்குக்கு ஜெயலலிதாவிடம் அவமானமே மிஞ்சியது. இருவரையும் நிற்க வைத்து, ஒருமையில் பேசி விரட்டி அடித்து அதிமுக தலைமை. இதனால் பிஸ்வாசுக்கு நெஞ்சு வலியே வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கார்த்திக் தனித்துப் போட்டி என்று களமிறங்கி தேர்தலில் படுதோல்வி கண்டார். இப்போது உள்ளாசித் தேர்தலில் தனித்துப் போட்டி அறிவித்திருந்தார். இந் நிலையில் அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக பொதுச் செயலாளர் தேவராஜன் கூறியுள்ளார்.

ஆனால், தலைவர் பிஸ்வாஸ் இதுவரை ஏதும் சொல்லவில்லை. இதனால் இது பிஸ்வாசின் முடிவா அல்லது கட்சியில் உள்ள கார்த்திக் எதிர்ப்பாளர்களின் முடிவா என்று தெரியாத அளவுக்கு குழப்பம நிலவுகிறது.

கார்த்திக் என்றாலே குழப்பம் தானே?...
தகவல் ; தட்ஸ்தமிழ்.காம்

Sunday, September 24, 2006

Tamil Actress Mumtaz மீது கவர்ச்சி காட்டியதாக வழக்கு!!!

வீராசாமி படத்தில் மிகக் கவர்ச்சியாக நடித்திருப்பதாக மும்தாஜ் மீதும் படத்தின் டைரக்டர் விஜ.ராஜேந்தர் மீதும் போலீசில் பாமக நிர்வாகி புகார் கொடுத்தள்ளார்.

சென்னை ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ஜானகிராமன். வழக்கறிஞரான இவர் பாமகவின் வேலூர் வடக்கு மாவட்ட மாணவர் சங்க செயலாளராகவும் உள்ளார். இவர் ராணிப்போட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

விஜய.டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவரவுள்ள வீராசாமி படத்தில் நடிகை மும்தாஜ் மிகவும் கவர்ச்சியாக, சாய்ந்து கொண்டு இருப்து போல் போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை ஒரு கொடுத்திருக்கும் போட்டோவை ஒரு பத்திரிகையில் பார்த்தேன்.




வழக்கறிஞர்கள் புனிதமாகவும், உயர்வாகவும் கருதக்கூடிய ஆல் இண்டியா ரிப்போட் எனப்படும் புத்தகங்களுக்கு அருகிலும், பின்னாலும் மும்தாஜ் படுத்துக் கொண்டிருப்பது போல் படம் உள்ளது. மேற்கூறிய புத்தகங்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஆகும்.


அந்த புத்தகங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றதில் வாதம் செய்யும்போது அடிப்படை மூலாதாரமாக பயன்படுகின்றன. பத்திரிக்கையில் வெளியாகியுள்ள படம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழில் ஆகியவற்றை கேவலப்படுத்துவதாகவும, அவமானப்படுத்தி, கெச்சைப்படுத்துவது போலவும் உள்ளது.


எனவே இந்த படத்தில் நடித்த நடிகை மும்தாஜ், படத்தின் இயக்குனர் விஜய.டி.ராஜேந்தர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் வீராசாமி படத்தில் அந்த கவர்ச்சி படத்தின் ஸ்டில்லை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்படுட்டுள்ளது

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

முரசு சின்னம் காலி : Vijaykanth பாய்ச்சல்

திமுக அரசு மத்திய அரசை கைக்குள் போட்டுக் கொண்டு, சதி செய்து, உள்ளாட்சி தேர்தல் பட்டியலில் முரசு சின்னமே இல்லாத அளவுக்கு மோசடி செய்துள்ளது என்று விஜய்காந்த் கூறியுள்ளார்.



அவர் கூறுகையில்,

கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. எங்கள் கட்சியில் தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் இணைந்து வருகிறார்கள். திமுக, அதிமுகவின் மக்கள் விரோத போக்குகளால் அக்கட்சியினரும் இணைந்து வருகின்றனர்.

தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்படுகின்றன. மாற்று அரசியலை மக்கள் விரும்புவதையே இது காட்டுகிறது. என் கட்சியில் இணைபவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, மாஜி அமைச்சர்கள் கண்ணப்பன், இந்திர குமாரி போன்றவர்களும் ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கியவர்கள் தானே.

அவர்கள் திமுகவில் இணைத்தால் நல்லவர்களாகி விட முடியுமா? ஆனால் கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள் தனித்து செயல்பட்டு வந்தவர்கள். கடலில் பல வகையான ஆறுகள் இணைகின்றன. ஆனாலும் கடலின் தன்மை மாறாது. அதுபோல என் கட்சியில் இணைபவர்கள் என் வழிக்கு வந்துவிடுவர்.

எம்எல்ஏவாக தேர்வான 100 நாட்களில், விருத்தாசலம் தொகுதியில் பள்ளி, மருத்துவமனை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு நிதி கிடைப்பதற்கு முன் எனது சொந்த நிதியில் ஏராளமான உதவிகளை செய்துள்ளேன். ஐந்து ஆண்டுகளில் அரசு நிதி மற்றும் என் சொந்த பணத்தைக் கொண்டு, விருத்தாசலத்தை மாநிலத்தின் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன்.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்தாக திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பு 50 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மிளகாவத்தல் ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.

புளி ரூ. 36லிருந்து ரூ.42 ஆகவும், துவரம் பருப்பு ரூ. 32லிருந்து ரூ.36 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.26லிருந்து ரூ.40 ஆகவும், ஏலக்காய் ரூ.300லிருந்து ரூ.500 ஆகவும், கடலைமாவு மூட்டைக்கு ரூ.2,400லிருந்து ரூ.3,800 ஆகவும், கோதுமை, மைதா போன்ற பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனையா?

இலவச டிவி, நிலம் வழங்குவதாக பறைசாற்றும் முதல்வர் கருணாநிதி, இலவசமாக கேபிள் இணைப்பு கொடுப்பதாக அறிவிக்க வேண்டியது தானே. கேபிள் டிவியை அரசுடைமையாக்குவது மத்திய அரசிடம் இருப்பதாக விளக்கமளிக்கும் கருணாநிதி, மத்திய அமைச்சரøவியல் திமுக இடம் பெற்றிருப்பதை மறந்து விட்டாரா?

மத்திய அரசை வலியுறித்தி, கேபிள் டிவிகளை அரசுவுடமையாக்கி, மக்களுக்கு இலவச சேவை கிடைக்கச் செய்ய வேண்டியது தானே. உள்ளாட்சி தேர்தலில் என் பிரச்சாரம் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்டடது. ஆனால், மத்திய அரசை கைக்குள் போட்டுக் கொண்டு திமுக அரசு சதி செய்து முரசு சின்னமே இந்த உள்ளாட்சி தேர்தல் பட்டியலில் இல்லாத அளவுக்கு செய்துள்ளனர்.

இதனால் நான் பின் வாங்கிவிட மாட்டேன். எனக்கு பின்னால் மக்கள் உள்ளனர் என அவர் கூறினார்

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

Powered by Blogger