Saturday, November 11, 2006

இன்றைய Politics Punch !!!


"நான் பிரதமராகும் தகுதி படைத்தவன். எப்படியும் ஒரு நாள் இந் நாட்டின் பிரதமராவேன்" (லாலு பிரசாத் யாதவ்)



"தமிழகத்தின் பெரு நகரங்களில் தாதாக்கள், கிரிமினல்களின் நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டன(இந்திய கம்யூ தலைவர் தா.பாண்டியன்)


தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Friday, November 10, 2006

Vijaykanth: திருமண மண்டபம் இடிப்பு - திட்டமிட்ட சதி!!!

சட்டப் பேரவை, உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு திருமண மண்டப இடிப்பு விவகாரத்தை எழுப்புவது திட்டமிட்ட சதி என்று தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கூறினார்.

என்னைப் அச்சுறுத்தி திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும்; தேமுதிக கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக Union Minister டி.ஆர். பாலு ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் மற்றும் தேமுதிக கட்சி அலுவலகத்தை இடிக்கப்போவதாக கூறியுள்ளார் என்றார் அவர்.



Chennai யில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் இப்போதைக்கு திருமண மண்டபத்தை இடிக்கும் திட்டம் கிடையாது. மாற்றுத் திட்டம் கொடுக்கலாம் என்று டி.ஆர். பாலு கூறினார்.

மாற்றுத்திட்டம்: National Highways ஆணையத்தின் திட்டப்படி, ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அமையும் பகுதியில் தரைவழிப் பாதை மட்டுமே வருகிறது. மேம்பாலம் வரவில்லை. தரைவழிப் பாதையில் மட்டும் சிறிது மாற்றம் செய்து மாற்றுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை, Chennai Metropolitan Developement Board முன்னாள் தலைமைத் திட்ட அதிகாரி ஒருவர் தான் தயாரித்து வழங்கினார்.

மாற்றுத்திட்டத்தை நிராகரிக்கிறோம் என்று ஒரு வரியில் அண்மையில் பதில் அனுப்பப்பட்டிருந்தது. ஏன் நிராகரிக்கிறார்கள் எனக் குறிப்பிடப்படவில்லை. எந்தப் பகுதியை இடிக்க உள்ளனர் என்பது குறித்தும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து Kanchipuram District Special Revenue Officer க்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்து 8 மாதங்கள் ஆகின்றன.

மேலும் நாங்கள் நஷ்டஈடுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரியதாக பாலு தெரிவித்துள்ளதும் பொய்யான தகவல்.

குடிசைப் பகுதி மக்களுக்கு வீடு வழங்குதல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு எனது மண்டபத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வேண்டுமென்றே என்னையும், எனது கட்சியையும் அழிக்கும் நோக்கில் இந்த மண்டபம் இடிக்கப்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் படலம்.

இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இதுகுறித்து பேசுகிறேன்.

Chennai Airport Expansion: திமுகவினரின் நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக Airport க்கு வலதுபுறமாக உள்ள நிலங்களை விரிவாக்கத் திட்டத்துக்குக் கையகப்படுத்தவில்லை. ஆனால், பொழிச்சலூர் குடியிருப்புப் பகுதிகளைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார் விஜயகாந்த்.

Related Post:

3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!

Tamil Magazine Thuglak Cartoon : ராமதாசுக்கு கலைஞர் ஆறுதல் !!




எமது முந்தைய Thuglak Cartoon பதிவுகளை காண இங்கே சுட்டவும்.

Labels:


Thursday, November 09, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 5 !!

தொடரின் கடைசி நாளான இன்று, சமீபத்தில் வெளிவந்து பரபரப்பாக பேசப்படும் ஒரு புத்தம் புது Search Engine பற்றிய அறிமுகம்.

Google.com, Yahoo.com மற்றும் MSN.com தளங்களின் மூலம் நமக்கு தேவையான பல விசயங்களை தினமும் தேடி பிடிப்போம். ஆனால் இதில் எல்லாம் இல்லாத ஒன்று www.like.com என்னும் தளத்தில் சாதித்து காட்டி இருக்கிறார்கள். அதுதான் Visual Search. அதாவது ஒரு பொருளின் தோற்றத்தை தெரிவித்தால், அதே போன்ற தோற்ற ஒற்றுமையுள்ள எல்லா பொருள்களையும் உங்கள் முன் ஓரே நொடியில் கொட்டி விடும் like.com தளம்.



உதாரணமாக மேழே உள்ள Paris Hilton படத்தில், அவர் கட்டியுள்ள Watch பிடித்திருக்கிறதா? இல்லை அதே போல் வேற எதேனும் Watch கள் தேட வேண்டுமா? கவலை வேண்டாம் like.com தளத்தில், Paris Hilton படத்தில் உள்ள Watch-ய் select செய்து (கட்டம் கட்டி) ஒரு சுட்டு சுட்டவும்.


உடனே அதே போல் உருவ தோற்றமுள்ள நிறைய மாடல்களை உங்கள் கண் முன் விரிக்கிறது like.com.



மேலும் Color, Shape போன்ற தன்மைகளில் சிறு மாற்றங்கள் செய்து கொள்ள வசதியும் உள்ளது.

Related Posts :
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 1
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 2
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 3
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 4

Goa வில் International Film Festival லில் பங்கேற்க வேண்டுமா?


Goa மாநிலத்தில் வரும் November 23-ம் தேதியிலிருந்து December 3-ம் தேதி வரை 37-வது International Film Festival நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகள், இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளும் வசதி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் www.iffi.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகளின் தகுதி மற்றும் இதர விவரங்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.


Source: Dinamani

Tamil Actress Jyothika படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு !!

மொழி படத்தின் ஷýட்டிங்குக்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருந்த ஜோதிகா, மேக்கப்மேன் வராததால் கோபமடைந்து ஷýட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.



சூர்யாவைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு ஜோதிகா நடித்து வந்த படம் மொழி. இந்தப் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் ஜோதிகா நடிக்க வேண்டியிருந்தது பாக்கி இருந்த நிலையில், அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது.




Click here for Surya-Jothika Marriage snaps

இருப்பினும், கல்யாணத்திற்குப் பிறகு இந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார் ஜோதிகா. சொன்னபடியே கல்யாணம், தேனிலவு, தலை தீபாவளி எல்லாவற்றையும் முடித்து விட்டு மொழி படத்தில் தான் சம்பந்தப்பட்ட மிச்சக் காட்சிகளை நடித்துக் கொடுத்தார் ஜோதிகா.

சமீபத்தில் மொரீஷீயஸில் ஜோதிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைப் படமாக்கினர். இந் நிலையில், சொச்சக் காட்சிகளை முடிக்க அடிசனலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார் ஜோதிகா. இதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு ஜோ வந்தார்.

இப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார். இதற்காக சிறப்பு மேக்கப் போட மும்பையிலிருந்து மேக்கப்மேனுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜோதிகா வந்து நெடு நேரமாக காத்திருந்தபோதும், மேக்கப் மேன் வருவதாக தெரியவில்லை.

பொறுத்துப் பார்த்த ஜோதிகா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். இதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியாது என்று கடுப்பாக சொல்லியபடி கிளம்பி காரில் ஏறி வீட்டுக்குப் பறந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் ராதா மோகன், வேறு வழியில்லாமல் அன்றைய ஷýட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பின்னாலேயே ஜோதிகா வீட்டுக்கு ஓடினார்.

அங்கு ஜோதிகாவிடம் ஸாரி சொல்லிய அவர் பெரிய மனது பண்ணி இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள், எப்படியும் அன்றைக்குள் உங்களது காட்சிகளை முடித்து விடுகிறோம் என்று கோரியுள்ளார். மனம் இறங்கிய ஜோதிகா சரி என்று சொல்லியிருக்கிறாராம்.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Wednesday, November 08, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 4 !!

தொடரின் நான்காவது பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகளுக்கான தொடுப்புகள் இந்த பதிவின் முடிவில் உள்ளன.

இன்றும் இரண்டு தளங்களுக்கு உங்களை கொண்டு செல்கிறேன். வெளிநாடுகளில் இருப்போருக்கு, அதுவும் அமெரிக்காவில் வசிப்போருக்கு Online Movie Rental பற்றி தெரிந்து இருக்கும். குறிப்பாக Netflix.com, Blockbuster.com மற்றும் qwikfliks.com தளங்கள் மிகவும் பிரபலம்.

இந்தியாவிலும் இப்பொழுது Online Movie Rental தளங்கள் வர ஆரம்பித்து விட்டன. சினிமா ரசிகர்கள் அதிகம் உள்ள நம் நாட்டில் இந்த தளங்களுக்கு வரவேற்பு பலமாக இருக்கும் என நம்பலாம்.







Bengaluru வில் இருந்து நடத்தப்படும் நிறுவனங்கள் இவை. இதில் catchflix.com தளம் சென்னையிலும் சேவை புரிகிறது. Idea நல்லா இருந்தாலும் Rental விலை கொஞ்சாம் கூடுதலோன்னு தோணுது ..நீங்க என்ன சொல்றீங்க ???


Related Posts :
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 1
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 2
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 3

Dinamalar : "காட்சி பொருளானது' இலவச கலர் "டிவி'

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவுக்கு உட்பட்ட நடுவலுõர் சமத்துவபுர மக்களுக்கு அரசு வழங்கிய இலவச கலர் "டிவி' களில் படங்கள் தெரியாததால், ,பெரும்பாலானவை "காட்சி பொருளாக' வைக்கப்பட்டுள்ளன.கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "அனைவருக்கும் இலவச கலர் "டிவி' வழங்கப்படும்' என வாக்குறுதி அளித்தது.

தொடர்ந்து, தி.மு.க., கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் மற்றும் குடிசை மாற்று வாரியங்களில் உள்ள மக்களுக்கு இலவச கலர் "டிவி' களை வழங்கியது.கடந்த செப்.,15ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி இலவச கலர் "டிவி'வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து செப்டம்பர் 16ம் தேதி மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் தலைமையில், இலவச கலர் "டிவி'கள் வழங்கப்பட்டன.தலைவாசல் சட்டசபை தொகுதியில் கெங்கவல்லி தாலுகாவுக்கு உட்பட்ட நடுவலுõர் சமத்துவபுரத்தில் எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமையில் இலவச கலர் "டிவி'கள் 87 பேருக்கு வழங்கப்பட்டன. இலவச கலர் "டிவி'யை பெற்ற சமத்துவபுரம் குடியிருப்புவாசிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.அவர்களின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. "டிவி'யை பெற்ற மறுதினம் முதலே பலரின் வீடுகளில் இலவச கலர் "டிவி' தனது "வேலையை' காட்டத் துவங்கியது. திடீரென படம் தெரியாமல் போவது, "டிவி' சூடேறி அதன் பாகங்கள் புகைந்து தீப்பிடித்தது போன்ற நாற்றம் வீசுவது என பல குறைபாடுகள் இருந்ததால், மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு சிலரின் வீடுகளில் உள்ள இலவச கலர் "டிவி'களில் "காட்சி'களை பார்க்க முடியாததால், அவை காட்சி பொருளாக மாறின.நடுவலுõர் சமத்துவபுரத்தில் வசிக்கும் முருகேசன், செல்வம், பார்வதி, பூக்காரர், சின்னு, சிவந்து, செல்லப்பன் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய"டிவி'கள் சில வாரங்களிலேயே பழுதடைந்தன. இந்த இலவச கலர் "டிவி'கள் பழுதடைந்தால், அந்தந்த மாவட்ட தலை நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள அரசின் அங்கீகாரம் பெற்ற கடைகளில் கொடுத்து, "டிவி'யை சர்வீஸ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலம் முழுவதும் 24 எலக்ட்ரானிக்ஸ் "டிவி' சர்வீஸ் சென்டர்களுக்கு அரசின் இலவச கலர் "டிவி'கள் சரி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சமத்துவபுரங்களில் வழங்கப்பட்ட இலவச கலர் "டிவி'களை சரிசெய்ய, சேலம், சாரதா காலேஜ் ரோட்டில் உள்ள கிருத்திகா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அரசு நியமித்துள்ளது.இந்த நிறுவனத்தை சம்பந்தப்பட்ட நடுவலுõர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தோர் போனில் தொடர்பு கொண்டு "டிவி' பழுதடைந்தது குறித்து புகார் தெரிவித்தனர்.யாரும் வந்து பழுதை சரி செய்யவில்லை. மீண்டும் அவர்களை பல முறை தொடர்பு கொண்ட போது, அவர்கள் பழுது சரி செய்து கொடுக்க முன் வராமல், "டிவி' களை சேலம் கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.

இது குறித்து நடுவலுõர் சமத்துவபுரம் வீடு எண்.93 குடியிருப்பில் வசிக்கும் முருகேசன் கூறியதாவது: இந்த "டிவி' வழங்கப்பட்ட மறுநாள் முதல் படமே தெரியவில்லை. இதுகுறித்து அப்போதே சேலத்தில் உள்ள "டிவி' சர்வீஸ் சென்டரை போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தோம். அவர்களிடமிருந்து பதில் இல்லாததால், தொடர்ந்து பல முறை தெரிவித்தோம். ஆனால், யாரும் "டிவி'யைசரி செய்ய வரவில்லை."டிவி'யை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து வரும்படி கூறுகின்றனர்.

சேலம் ஆத்துõர் சாலை மோசமாக இருப்பதால் "டிவி'யை பஸ்ஸில் எடுத்து செல்வது கடினம் என தெரிவித்தால், "ஜமக்காளத்தில் கட்டிக் கொண்டு' துõக்கி வரும்படி கிண்டலாக பதில் தெரிவிக்கின்றனர்.என்னுடைய "டிவி' மட்டுமின்றி, இங்கு இருபதுக்கும் மேற்பட்டோரின் வீடுகளில் அரசின் இலவச கலர் "டிவி'யில் சரிவர காட்சிகள் தெரியவில்லை.இவ்வாறு முருகேசன் கூறினார்.அதே பகுதியில் வசிக்கும் பெரியம்மாள், பாப்பாத்தி ஆகியோர் கூறியதாவது:சிறிது நேரம் "டிவி' ஓடினாலே, "டிவி' சூடாகி தீப்பிடித்த நாற்றம் வீசுகிறது. சில சமயங்களில் படமே தெரிவதில்லை. பல வீடுகளில் இதே நிலை தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.கெங்கவல்லி சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய இலவச கலர் "டிவி'கள் பல பழுதடைந்த நிலையில் இருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தகவல்: தினமலர்

Tuesday, November 07, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 3 !!

தொடரின் மூன்றாவது நாளான இன்று நாம் காண இருப்பது Speech Bubbles. பதிவுகளில் அவ்வப்போது பலரும் Photo-கள் சேர்த்து வெளியிடுவது உண்டு. இந்த Photo -களில் இருக்கும் உருவங்களுக்கு ஒரு பேசும் effect கொடுப்பது தான் Speech Bubbles என்பது. உதாரணமாக கீழே உள்ள படத்தில் திருமாவும், முகவும் தங்கள் மனதிற்குள் நினைப்பதை போன்ற effect உடன் ஒரு புகைப்படம்.



நாளேடுகளில் இது போன்ற படங்கள் அன்றாடம் வருவது உண்டு. இப்பொழுது வலையுலகிலும் இது போல் செய்ய இயலும். இரண்டு தளங்கள் இதற்கு உதவுகின்றன.

1. www.bubblesnaps.com
2. www.wigflip.com

இந்த தளங்களுக்கு சென்று, உங்களுக்கு தேவையான ஒரு புகைபடத்தை upload செய்து கொள்ளுங்கள். பிடித்தமான Bubble style தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு க்ளிக். அவ்வளவு தான். Speech Bubbles புகைப்படம் ரெடி !!!




இதில் bubble snaps தளம் பயனீட்டார்களுக்கு மிக எளிதாகவும், அதே சமயம் நிறைய Variety -யுடனும் வருகிறது. Wigflip தளமும் நன்றாகத்தான் உள்ளது ஆனால் Variety கம்மி.

நீங்கள் வடிவமைக்கும் Speech Bubbles உடனான புகைப்படத்தை Blog களில் Flash Video களாக embed செய்து கொள்ளலாம். அந்த Video -களை ஒரு முறை சுட்டினால், உடனே Speech Bubbles 'டக்' கென்று வரும். கீழே இருக்கும் Video களில் சுட்டி பாருங்களேன் !!!





Related Posts :
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 1
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 2

Vijaykanth opposes death sentence to Saddam !!!

Iraq முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Iraq முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது மனிதாபிமானமற்ற செயல். கோர்ட்டில் சதாம் உசேன் முன் வந்து வழக்காடினார். கோர்ட் அதை புறக்கணித்தது மட்டுமல்ல, அவர் சார்பான வாதங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

சதாம் உசேனுக்கு அளித்த துõக்கு தண்டனை நியாயம் அற்றது என்ற உணர்வே உலக மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. மேலை நாடுகளின் நிர்பந்தத்தால் அவருக்கு துõக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவே மக்கள் கருதுகின்றனர்.

சதாம் உசேன் சார்பாக வாதாடிய வக்கீல்களும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நீதி வழங்கினால் மட்டும் போதாது. நியாயமான முறையில் நீதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்கொப்ப நீதி வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஆகவே சதாம் உசேனுக்கு அளிக்கப்பட்ட துõக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்து, நியாயமான விசாரணைக்கு வழிவகுப்பதே முறை.

இந்த சூழ்நிலையில் அவருக்கு வழங்கிய தீர்ப்பை கண்டிப்பது மட்டுமல்ல. அதனால், Iraq-கில் ஏற்பட்டிருக்கும் அமளி, உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்பதை மேலைநாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்



பின் குறிப்பு : விஜயகாந்தின் இந்த அறிக்கை, அதிபர் புஷ்சை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கேப்டனின் வேண்டுகோளை ஏற்று, சதாம் உசேனை விடுதலை செய்ய திட்டமிடுவதாகவும் தெரிகிறது.



Related Post:

3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!

Monday, November 06, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 2 !!

இந்த தொடரின் முதல் நாளான நேற்று நாம் பார்த்தது தமிழ் வாக்கு வலைதளம். இன்று நாம் காண இருப்பது இரு Video sharing தளங்கள்.

YouTube.com பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. சமீபத்தில் அதை Google.com, 1.65 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது. YouTube.com தளத்தை போன்ற இரு Website-களை நான் சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தேன்.

இப்பொழுது மேலும் இரு Video Sharing தளங்கள் இதோ உங்களுக்காக. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கீழ் கண்ட இரு தளங்களும் இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கபட்டது. நான் பார்த்த வரையில் வட இந்தியர்களின் நடமாட்டமே அதிகமாக தென்படுகிறது.

1) www.meravideo.com



2) www.apnatube.com




இதில் apnatube.com தளத்தில் Adults only சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. மற்றபடி இந்த தளங்களில் இருந்து வீடியோக்களை பதிவுகளில் embed செய்யும் வசதி உண்டு.



meravideo.com தளத்தில் இருந்து ஒரு video இதோ இங்கே. ஒரு ஆணும், பெண்ணும் வேகமாக வரும் ரயில் வண்டியில் அடி படாமல் மயிரிழையில் தப்பிப்பதை தெளிவாக காட்டும் Video.




apnatube.com தளத்தில் இருந்து ஒரு video இதோ இங்கே. 'Chaiya Chaiya' பாடலின் Remix video இது.



Related Post:

Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 1

3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் திருமண மண்டபத்தை இடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை இறுதி முடிவெடுத்துவிட்டது.

இந்த நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக விஜயகாந்த் கொடுத்த மாற்றுத் திட்டத்தை நிராகரித்து விட்டதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அருகே விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள்அழகர் திருமணம் மண்டம் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் ஏற்படும் பயங்கர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அங்கு அடுக்கு மாடி மேம்பாலம் கட்டப்படவுள்ளது.

இதனால் இந்த மண்டபத்தின் ஒரு பகுதி இடிபடவுள்ளது. இதற்கு விஜய்காந்த் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து மேம்பாலத்தை வேறு மாதிரி கட்டலாம் என்று ஒரு 'பிளான்' தந்தார்.

மேலும் தனது வழக்கறிஞர் மூலம் அதே பிளானை தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமும் தந்தார்.

இந்த மாற்றுத் திட்ட பிளான் குறித்து பரிசீலிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பாலுவிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை காங்கிரஸ் அமைப்பின் பொறியாளர்கள் அந்த பிளானை ஆய்வு செய்தனர். ஆனால், விஜய்காந்த் தந்த அந்த மாற்றுத் திட்டம் சரி வராது என்று பொறியாளர்கள் கூறிவிட்டனர்.

இந் நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் டி.ஆர்.பாலு. அவர் கூறுகையில், கோயம்பேட்டில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அடுக்கு மேம்பாலம் கட்டவுள்ளது. இத்திட்டத்தால் 168 கட்டடங்கள் பாதிக்கப்படும். இதில் விஜயகாந்த் திருமண மண்டபமும் ஒன்று.

தற்போது அந்த திருமண மண்டபம் விஜயகாந்த்தின் மனைவி பெயரில் உள்ளது.

இதுதொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணிக்காக 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் வெளியிட்டது. அப்போது விஜய்காந்த் தரப்பிலிருந்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், பின்னர் அந்த மண்டலத்தின் வருவாய் அதிகாரி தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்ட விதிகளின்படி மண்டபத்தின் ஆவணங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பியவுடன் விஜய்காந்த் தரப்பில் இருந்து ஒரு வழக்கறிஞர் வந்து ஆஜரானார்.

அந்த வழக்கறிஞர் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்று வரைபடம் (பிளான்) ஒன்றைத் தந்தார் விஜய்காந்த். அந்தப் படத்தில், பாரிமுனையிலிருந்து பாடி செல்வதற்கான பாதையே இல்லை.

மேலும், 40 மீட்டர் ரேடியஸ் அளவும் இல்லை. இது சாலை விதிகளின் தரத்திற்கேற்ப இல்லை. எனவே அந்த மாற்றுத் திட்டத்தை ஏற்க முடியாது என தேசிய நெடுஞ்சாலைத்துறை காங்கிரஸ் கூறிவிட்டது.

இன்னும் 3 வாரத்தில் கோயம்பேடு அடுக்கு மாடிப் பாலம் கட்டும் பணிகள் தொடங்கவுள்ளன என்றார் பாலு.

அப்படியானால் மண்டபம் இடிபடுவது உறுதியாகிவிட்டதா என்று நிருபர்கள் கேட்டபோது, அந்தப் பகுதியில் மக்கள் நலனுக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இடிக்கப்படும் 168 கட்டடங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து பாலு பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக பல மகத்தான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். திருச்சியில் ரூ. 248 கோடி மதிப்பிலும், சென்னையில் ரூ. 196 கோடி மதிப்பிலும், மதுரையில் ரூ. 136 கோடி மதிப்பிலும், நெல்லையில் ரூ. 122 கோடியிலும், கோவையில் ரூ. 100 கோடி மதிப்பிலும், சேலத்தில் ரூ. 63 கோடி மதிப்பிலும் சாலை மேம்பாடு, புறவழிச் சாலைப் பணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.

ராமேஸ்வரத்தில் பல்நோக்கு துறைமுகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதேபோல கொளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு விழா ஜனவரி 17ம் தேதி நடைபெறுகிறது. இதை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். 1 வார காலம் இந்த விழா நடைபெறுகிறது என்றார் பாலு.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Sunday, November 05, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 1 !!

இந்த வாரம் முதல் Weekly Special பகுதி அறிமுகமாகிறது. முதல் வார special-லில் நான் கேட்டு, கண்டு, ரசித்த வித்தியாசமான வலைதளங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வழக்கம் போல் பாராட்டுக்களையும், குறைகளையும் வெளுத்து வாங்குங்கள்.


முதல் வாரத்தில், முதல் நாளான இன்று தமிழ் வாக்கு
என்ற வலைதளத்தை பார்ப்போம்.

தமிழ்மணம், தேன்கூடு வரிசையில் இப்பொழுது தமிழ் வாக்கு
என்ற வலைதளம் வந்துள்ளது. ஒரு பெரிய வேறுபாடு என்னவென்றால் இதில் தானாகவே பதிவுகளை திரட்டும் வசதி கிடையாது. யார் வேண்டுமானாலும் எந்த பதிவையும் சமர்ப்பிக்கலாம்.



பெறும்பாலானோர் ,Digg.com பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். இது ஆங்கில வலைபதிவுகளை, சனநாயக முறைப்படி வெளியிடுகிறது. பதிவுகளை படிக்கும் வாசகர்கள், அதில் தெரியும் Digg பொத்தான அழுத்தி வாக்களிக்கலாம்.


அதிகம் வாக்கு பெற்ற பதிவுகள் ,Digg.com வலைதளத்தின் முதல் பக்கத்தில் நிறைய நேரம் தென்படும் வாய்ப்பினை பெறுகிறது.


தமிழ் வாக்கு வலைதளம், Digg.com வலைதளத்தின் Xerox copy என்றே சொல்லலாம். ஆனால் இன்னும் நம் பதிவுகளில் வாக்கு பொத்தானை, பதிவை வெளியிடும் போதே வெளியிட்டுக்கொள்ளும் வசதி இல்லை. என்ன புரியலையா? அதாவது தமிழ்மணம் கருவிபட்டை நம் பதிவுகளில் வர, நம்முடைய template களில் ஒரு சிறிய code script சேர்த்து கொள்கிறோம் இல்லையா? அது போல் தமிழ் வாக்கு தளத்தின் வாக்கு பொத்தானை வர செய்ய வசதி இல்லை. எனினும் தமிழ் வலைப்பதிவுகளை ஒரு சேர காண மேலும் ஒரு இடம் கிடைக்கிறதே என்று மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். என்ன நான் சொல்றது?

Rahul Gandhi to be Congress General Secretary?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிவிரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி.,யில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.




பஞ்சாப், உத்தராஞ்சல், உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கட்சிப் பொறுப்பில் இருந்த மூத்த தலைவர்கள் பலர் அரசு பொறுப்புக்கு சென்று விட்டதால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிவிரைவில் மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த மாதம் மத்திய அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சிப் பொதுச் செயலராக இருந்த ஏ.கே.அந்தோணி ராணுவ அமைச்சராக பதவியேற்றார். அவர் கவனித்து வந்த காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பதவியும் இதனால் காலியாகி உள்ளது. அதே போல், இலாகா இல்லாமல் இருந்து வந்த மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தொழிலாளர் நலத்துறை(தனிப்பொறுப்பு) அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் கவனித்து வந்த காங்கிரஸ் தலைமை அலுவலக பொறுப்புகளும் வேறொருவருக்கு மாற்றித் தரப்பட உள்ளன.

காங்கிரஸ் மீடியா பிரிவின் தலைவர் பதவி மற்றும் பஞ்சாப், அரியானா மாநில விவகாரங்களை ஜனார்த்தன் திவேதி ஒருவரே பார்த்து வருகிறார். இந்த பொறுப்புகளுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது சோனியாவின் நீண்ட நாள் ஆசை. அதனால், அமேதி தொகுதி எம்.பி.,யும் தனது மகனுமான ராகுலை உ.பி., மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் வகையில் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ராகுல் விரைவில் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம். ராகுல் போன்ற துடிப்பான தலைவர்களின் வருகையால் காங்கிரஸ் கமிட்டிக்கு புது ரத்தம் பாய்ச்சப்படும் என்பதில் சந்தேகமில்லை.

"எனக்கு பதவி எதுவும் வேண்டாம், போதிய அரசியல் அனுபவம் பெற்ற பிறகே கட்சியின் உயர் பதவிகளுக்கு வருவேன்" என ராகுல் ஐதராபாத் கட்சிக் கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது

நன்றி : தினமலர்.

Powered by Blogger