Saturday, November 18, 2006

Vimala Raman in Balachandar's New Film Poi

விழிகளாலேயே பல மொழி பேசும் நடிகைகளை இப்போது பார்ப்பது அரிது. ஆனால் ஆஸ்திரேலியக் கிளியான Vimala Raman னின் குண்டு விழிகளோ கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறது.
Actress Vimalaraman

Tamil என்ற வார்த்தையை மட்டுமே தெரிந்த பல நடிகைகள் கொடி கட்டிப் பறக்கும் Kodampaakத்தில், அட்சர சுத்தமாக தமிழ் பேசி அசத்தலாக நடிக்க வந்துள்ளார் விமலா ராமன்.

பாப்பாவுக்கு அப்பா Bangalore, அம்மாவுக்கு Coimbatore. ஆனால் விமலா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே கங்காரு நாடான ஆஸ்திரேலியாவில் தான்.

அப்பாவும், அம்மாவும் 35 வருஷத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வண்டி ஏறி விட்டார்களாம். இதனால் விமலா ஒரு ஆஸ்திரேலியப் பிரஜை.

வீட்டில் Tamil தான் ஆட்சி மொழி என்பதால், ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்றாலும் கூட விமலாவுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே Tamil நன்னாத் தெரியுமாம். அத்தோடு பரதநாட்டிய¬ம் மிஸ்.ராமனுக்கு அத்துப்படியாம்.

பரதநாட்டியம் கற்ற கையோடு அடிக்கடி Tamil Nadu பக்கம் பறந்து வந்து ஆடிச் சென்றுள்ளார் விமலா. அவரது அழகைப் பார்த்த சில விளம்பர நிறுவனங்கள், 'ஆடு'க்கு நடிக்கிறேளா என்று கேட்க ஓ.கே. சொல்லி சில விளம்பரங்களில் நடித்தும் உள்ளார் விம்ஸ்.

விளம்பரத்தில் விமலாவைப் பார்த்த Kamal Hassan, தனது நள தமயந்தி படத்தில் நடிக்க அழைத்துள்ளார். ஆனால் அப்போது ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்ததால் இப்போது வேண்டாம் என்று கூறி அப்பா முட்டுக்கட்டை போட்டு விட்டாராம்.

இப்போ 'செமத்தி'யாக வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டதால், பொய் படத்தில் கே.பாலச்சந்தர் அழைத்தபோது வீட்டில் பச்சைக் கொடி காட்டி விட்டார்களாம். இப்படித்தான் Vimala சினிமா நடிகையானாராம்.

பொய் படத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் Balachandar அழைத்தபோது அவரது அலுவலகத்திற்கு விமலாவும், அப்பா விமலாவும் போயுள்ளனர். நேராக கே.பி.யின் கேபினுக்குள் நுழைந்த விமலா, விவேக் பாணியில் ஹாய் ஹாய் என்றபடி கே.பிக்கு கை கொடுத்து விட்டு இருக்கையில் உட்கார்ந்து கொண்டாராம்.

அவர் பேசியது, நடந்து கொண்டதை கூர்ந்து கவனித்த கே.பி. நீதாம்மா என்னோட ஹீரோயின் என்று அப்பாயிண்ட்மென்ட் பண்ணியுள்ளார். ஆனால் ஆஸி ஐஸ் பெண்ணான விமலாவோ, கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் என்று கூலாக கூறி விட்டு கிளம்பியுள்ளார்.

அதற்கு கே.பி. என்னம்மா நீ, என்னோட படத்துல நடிக்க பொண்ணுங்க ஏங்கிட்டிருக்காங்க, நீ இப்படி சொல்றியேன்னு அதிர்ச்சி காட்டியுள்ளார். ஆனாலும் அசராத விமலா, பத்து நாள் டைம் கொடுங்க சார், யோசித்துச் சொல்கிறேன் என்று கூறி விட்டு 'எஸ்' ஆனாராம்.

அப்புறமாக, கே.பி.யின் அலுவலகத்திலிருந்து ஒரு மேனேஜர் விமலாவுக்கு SMS அனுப்பி பல அறிவுரைகளை கூறியுள்ளார். அதன் பிறகே பாலச்சந்தரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஓடோடி வந்து ஓ.கே. சொன்னாராம்.

தான் கே.பியிடம் பட் பட்டென்று பேசியது, அவருக்கு எதிராக உட்கார்ந்தது, தடாலடியாக டைம் கேட்டது எல்லாமே தவறு என்று கே.பி. அலுவலகத்தில் இருந்தவர்கள் விமலாவிடம் எடுத்துக் கூறினராம். ஆனால் அப்படிப்பட்ட பார்மாலிட்டிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவில் கிடையாது என்பதால் தான் அப்படி நடந்து கொண்டதாகவும், மற்றபடி பாலச்சந்தர் சாரை மதிக்காத தன்மை கிடையாது என்று சமாளித்தார் விமலா.

எப்படியோ, அழகு நிலாவைப் பிடித்து பொய் அழகியாக்கி உலவ விட்டுள்ளார் Balachandar.

இந்த அழகுப் பிசாசு என்ன பாடுபடுத்தப் போகிறதோ ரசிகர்களை.

Friday, November 17, 2006

இன்றைய Politics Punch !!!


"கட்சி நடத்த முடியாதவர்கள், நாலு பேரை வைத்து மேய்க்க முடியாதவர்கள், செயலிழந்து போனவர்கள், அரசியலில் வீணாய் போனவர்கள் ஆகியோர் தான் விஜய்காந்த் கட்சியில் போய் சேருகிறார்கள்" (திருமாவளவன்)


தகவல்: Thatstamil.com

Thursday, November 16, 2006

Maniratnam's Film may be troubled by Ambani !!!


Aishwarya Rai, Abhishek Bachchan ஆகியோரை வைத்து ManiRatnam இயக்கும் "Guru" படம், மறைந்த தொழிலதிபர் திருபாய் Ambani யின் கதை என்ற கருத்து பரவியது. இதையடுத்து படத்தை வெளியிடும் முன் தனக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று ManiRatnam தரப்பிடம் Ambani யின் மூத்த மகன் Mukesh Ambani கூறியுள்ளார்.
அதே சமயம் Ambani யின் இன்னொரு மகன் Anil Ambani "Guru" படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய ADLABS நிறுவனம்தான் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.


தகவல்: Dinamani

Tamil Magazine Thuglak Cartoon: தமிழக காங்கிரஸ் பரிதாபம் !!!




எமது முந்தைய Thuglak Cartoon பதிவுகளை காண இங்கே சுட்டவும்.

Labels:


Wednesday, November 15, 2006

Kamalhassan Sings for Ilayaraja's Ring Tones !!!


Cell Phone Ring tones க்காக Ilayaraja வின் பாடல்களை அவரது மகனும், இசையமைப்பாளருமான Karthik Raja Remix செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக Ilayaraja வின் இசையில் மிகவும் பிரபலமான 100 பாடல்களைத் தேர்வு செய்து அவற்றை Ring Tone க்காக Remix செய்துவருகிறார். இதன் முதல் கட்டமாக 1978-ம் ஆண்டு "சிகப்பு ரோஜாக்கள்' படத்திற்காக கமல்ஹாசன் பாடிய "நினைவோ ஒரு பறவை...' என்ற பாடலை மீண்டும் அவரையே பாட வைத்து Remix செய்துள்ளார் கார்த்திக் ராஜா. "இளையராஜா ரூல்ஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த Ring tone களை ஆல்டோசிஸ் மற்றும் பைரோ நிறுவனங்கள் இணைந்து Aircell மூலம் வெளியிடுகின்றன.


தகவல் : தினமணி

Aishwarya தயாரிப்பில் Rajini Kanth Animation film !!!




தகவல்: தினமலர்

இன்றைய Politics Punch !!!

"திமுகவுக்கு குடைச்சல் தந்து அதை உடைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் தன் சுயநலத்துக்காக எடுத்த முடிவு திராவிட இயக்கத்தையே கெடுத்தது. அதனால் கிடைத்த கேடு (ஜெ) இன்றைக்கும் தொடர்கிறது" (பேராசிரியர் அன்பழகன்)

Tuesday, November 14, 2006

Rajini யின் Hotel மீது கல் வீசிய வாலிபர் கைது !!!

Actor Rajini யைப் பார்க்க முடியாத ஆத்திரத்தில், அவருக்குச் சொந்தமான Hotel மீது கல்வீசிய நபரை போலீஸôர் கைது செய்தனர்.



திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அருள் (32). இவர், ராயப்பேட்டை பகுதியில் தங்கி கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். Rajini யைப் பார்க்க வேண்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றார். அங்கிருந்தவர்கள், Rajini படப்பிடிப்புக்கு வெளியே சென்றுள்ளார். எனவே, அவரை பார்க்க முடியாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவ்வழியே சென்ற ஒருவரிடம், Rajini க்கு சொந்தமான Hotel எங்கே உள்ளது என்று கேட்டுள்ளார். அவர், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

உடனே நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு வந்த அருள், Rajini க்கு சொந்தமான ஹோட்டலுக்குள் உள்ள ஒரு உணவு விடுதியின் கண்ணாடி மீது கல்வீசினார்.

இதுதொடர்பாக, அங்கிருந்தவர்கள் போலீஸýக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீஸôர், அருளை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், Rajini யைப் பார்க்க முடியாத ஆத்திரத்தில், அவருக்குச் சொந்தமான Hotel மீது கல்வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்: தினமணி

Tamil Magazine Kumudam Cartoon: சதாம் தூக்கு !!!


JIPMER விவகாரம் : ராமதாஸ் ஆவேச பேட்டி !!!

Puducherry யில் உள்ள JIPMER மருத்துவனைக்கு சுயாட்சி அதிகாரம் கொடுப்பதை எவனாலும் தடுக்க முடியாது என்று பாமக நிறுவனர் Ramadoss படு ஆவேசமாக கூறியுள்ளார்.

Puducherry பாமக எம்.பி. Ramadoss ன் பொது வாழ்வுச் சாதனைகளைப் பாராட்டும் விதமாக Puducherry யில் பாமக சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் Ramadoss படு ஆவேசமாகவும், காட்டமாகவும் பேசினார்.

ராமதாஸின் பேச்சு புதுவை முதல்வர் ரங்கசாமியை குறி வைத்து ஆவேசமாக இருந்தது. குறிப்பாக JIPMER விவகாரம் தொடர்பாக அவர் பேசும்போது அவன், இவன் என்று ஒருமையிலும் கோபமாக பேசினார்.

ராமதாஸ் பேசுகையில், JIPMER மருத்துவனைக்கு கண்டிப்பாக சுயாட்சி அந்தஸ்து கொடுக்கப்படும். அந்த மருத்துவமனை மிகச் சிறந்த வசதிகளைப் பெறும் பொருட்டுதான் சுயாட்சி அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்படுவது நிச்சயம். அதை எவனாலும் தடுக்க முடியாது. எந்த நாயாலும் தடுக்க முடியாது. JIPMER க்கு சுயாட்சி அந்தஸ்து கிடைப்பதால் தங்களுக்கு பாதிப்பு வரும் என ஊழியர்கள் நினைக்கத் தேவையில்லை.

ஊழியர்கள் தங்களது போராட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். அவர்களை சிலர் பின்னால் இருந்து தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களின் சதி பலிக்காது.

இங்கே என்ன ஆட்சி நடக்கிறது என்றே தெரியவில்லை. ரங்கசாமி முதல்வராக நீடித்தால், Puducherry மாநிலம் சீரழிந்து விடும், சின்னாபின்னமாகிப் போய் விடும். அவரது ஆட்சியில் Puducherry சிதிலமடைந்து போய்க் கிடக்கிறது.

Pondicherry என்ற பெயரை Puducherry என்று மாற்ற முக்கியக் காரணம் இங்கே உள்ள பாமக எம்.பி. Ramadossதான். அவரது இந்த வரலாற்றுச் சாதனையை பாடப்புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

அதேபோல Puducherry யில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் எம்.பி. Ramadoss தான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். பஞ்சாயத்துக்குளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.

தேசிய பஞ்சாலைக் கழகம் வசம் இருந்த பாரதி மற்றும் சுதேசி மில்களைப் பெற்று அதை மாநில அரசிடம் ஒப்படைத்த பெருமையும் பாமகவுக்கே உண்டு என்றார் Ramadoss.

முதல்வர் ரங்கசாமியையும், Puducherry காங்கிரஸ் ஆட்சியையும் Ramadoss கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது புதுவை காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Thatstamil.com

Monday, November 13, 2006

Actress Gopkia's father beaten in Kerala by gang !!!


Actress Gopikaவின் தந்தையை ரவுடிக் கும்பல் கோபிகா கண் முன்னாலேயே சரமாரியாக அடித்து உøத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



Actress Gopikaவின் சொந்த ஊர் Kerala மாநிலம் Trichur. இங்குள்ள ஒரு தியேட்டருக்கு Gopika, அவரது தந்தை, தாயார், தங்கை ஆகியோர் படம் பார்க்கச் சென்றனர்.

அப்போது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் சபீர் என்பவர் அமர்ந்திருந்தார். அவரை எழுந்திருக்குமாறு கோபிகாவின் தந்தை கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சபீர் தனது Cell Phone மூலம் தனது நண்பர்களை தியேட்டருக்கு வரச் சொன்னார். அவர்கள் வந்தவுடன், அத்தனை பேருமாக சேர்ந்து கோபிகாவின் தந்தையை குண்டுக்கட்டாக தூக்கி தியேட்டருக்கு வெளியே கொண்டு வந்தனர்.

அங்கு வைத்து கோபிகாவின் தந்தையை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதைப் பார்த்து Gopika , தாயார், தங்கை ஆகியோர் கதறி அழுதனர். உதவி கோரி குரல் எழுப்பினார்கள். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.

இந்த சம்பவம் குறித்து Gopika சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த கோபிகாவின் தந்தை Hospital லில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Vijaykanth வெட்டி பேச்சு பேசுகிறார் : T.R. Balu !!!


கல்யாண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள், கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள் என வீண் வம்பு பேசிக் கொண்டிருக்கிறார் Vijaykanth என்று Union Highways Minister T.R.Balu கூறியுள்ளார்.

தேமுதிகவை அழிக்கும் நோக்கில்தான் தனது கல்யாண மண்டபத்தை திமுக இடிக்கப் பார்க்கிறது என Vijaykanth குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன், என்னை அழிக்கப் பார்க்கும் திமுகவின் எண்ணம் பலிக்காது என்றும் கூறியுள்ளார்.



இந் நிலையில், Vijaykanthதின் பேச்சுக்கு Union Minister T.R. Balu காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அமைச்சர் தனது திருமண மண்டபத்தை இடிக்கிறார் என்று புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள Vijaykanth, வீண்பழி சுமத்தி, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கிறார்.

என்னிடம் சினம் கொண்டு சீறிப் பாய்வதை Vijaykanth நிறுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து, சிந்தித்துப் பார்த்து உண்மை உணர்வது நல்லது.

கோயம்பேட்டில் Vijaykanth மனைவி Premalathaக்கு சொந்தமான இந்த நிலத்தை National Highways Department-ன் தேவையைக் கருதி அரசினால் கையகப்படுத்தப்பட இருக்கிறது என்று 20.12.2005 அன்று வெளியிட்ட முதல் அறிவிக்கையை தெரிவித்தபோது Vijaykanth ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை?

எவ்வளவு இடத்தை கையகப்படுத்துகிறோம் என்று மத்திய அரசு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். கோயம்பேடு சர்வே எண் 14/2ல் 286 சதுர மீட்டரும், சர்வே எண் 14/3ல் 165 சதுர மீட்டரும், சேர்த்து மொத்தம் 451 சதுர மீட்டர் என்பதை பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிவிக்கையில் இருப்பதை படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வாரா?

Vijaykanth கொடுத்துள்ள மாற்றுத் திட்ட வரைபடத்தில் பாரிமுனையிலிருந்து அம்பேத்கர் சிலை சந்திப்பில் திரும்பி பாடி பகுதிக்கு செல்ல வழி வகுக்கப்பட்டிருக்கிறதா? பாரி¬முனையிலிருந்து கிண்டி செல்வதற்கு தந்துள்ள சாலையில், வட்டப் பகுதியில் உள்ள விட்ட அளவு இந்திய சாலை குழுமத்தின் விதிப்படி உள்ளதா?

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் 164 பேரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களா? பொதுமக்கள்தானே.

இப்படிப்பட்ட சாலை விரிவாக்கத்தினால் Hindu, Muslim, Christian வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதே இல்லையா?

தாம்பரம் சானட்டோரியத்தில் இருந்த அஷ்டலட்சுமி, ஆஞ்சநேயர், ராமர் கோவில்கள், காயிதே மில்லத் தொழுது வந்த குரோம்பேட்டை மசூதி, சிங்கபெருமாள் கோவில் கோவில் கட்டடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்காக கையகப்படுத்தவில்லையா?

கத்திப்பாரா சந்திப்பில் நடைபெறும் பல கோடி ரூபாய் பணிகளுக்காக அரசுத் துறையின் SIDCO கட்டடம் இடிக்கப்படவில்லையா?

நேருவின் சிலை கத்திப்பாரா சந்திப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்படவில்லையா? இந்த கோயம்பேடு சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை மாற்று இடத்தில் அமைத்திட Dalit இயக்கங்களும், அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு தரவில்லையா?

கோயம்பேடு, மீனம்பாக்கம், கத்திப்பாரா, பாடி ஆகிய இடங்களில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளை 2005 பிப்ரவரி 1ம் தேதி முதல்வர் Karunanidhi துவக்கி வைத்துப் பேசினார் என்பதை நாடறியும். மதுரையில் Vijaykanth தேமுதிக என்ற கட்சியை 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியன்றுதான் தொடங்கினார்.

Karunanidhi கோயம்பேடு திட்டப் பணிகளை துவக்க வைத்த பிறகு 8 மாதம் கழித்துத்தான் Vijaykanth அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதுதான் வெளிப்படையான உண்மை. சுமார் 8 மாதத்திற்குப் பின்னர் துவக்கப்படவிருந்த ஒரு கட்சியை அழிப்பதற்கு முன் கூட்டியே திமுக திட்டமிட்டதா?

57 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவால் துவங்கப்பட்ட அமைப்பு திமுக. இது ஒரு லட்சிய அமைப்பு. வீண் வம்பு, வானத்தை வளைத்து வில்லாக்கும் வெட்டிப் பேச்சு இவைகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்று கூறியுள்ளார் பாலு.

Related Post:
Vijayakanth ஒத்துழைக்க வேண்டும்: T.R. Balu
3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!
Vijaykanth: திருமண மண்டபம் இடிப்பு - திட்டமிட்ட சதி!!!

Sunday, November 12, 2006

Vijayakanth ஒத்துழைக்க வேண்டும்: T.R. Balu

Chennai கோயம்பேட்டில் அமையவுள்ள அடுக்கு மேம்பாலம் உருவாக விஜயகாந்த் ஒத்துழைக்க வேண்டும் என்று Union highways Minister T.R. Balu கூறியுள்ளார்.


இதுதொடர்பாக Chennai Guindy யில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயம்பேட்டில் பல திசைகளுக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதியாக அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு Vijayakanth தின் கல்யாண மண்டபம் உள்பட 164 கட்டடங்களை இடிக்கவுள்ளோம். இதில் Vijayakanth அரசியல்வாதி என்பதால் அவரது கட்டடத்தை இடிக்கத் துடிப்பதாக கூறுவது நியாயமல்ல. மற்ற கட்டடங்களுக்குச் சொந்தமானவர்கள் சாதாரணர்கள் தான், அவர்கள் அரசியல்வாதிகள் கிடையாது.

இத்திட்டத்திற்கு Vijayakanth மாற்றுத் திட்டம் கொடுத்தார். ஆனால் அவர் தந்த திட்டத்தில், வலது புறம் அதாவது Paris corner இருந்து பாடி செல்ல வழி இல்லை. மேலும் Paris corner ல் இருந்து கத்திப்பாராவுக்கு செல்லும் பாதை 40 அடியாக உள்ளதா என்பதைக் கூற வேண்டும்.

மாற்றுத் திட்டம் Indian Legislation க்கு உட்பட்டு உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்பு கத்திப்பாராவில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட SIDCO கட்டடம், அங்கு கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்கப்பட்டது. அதற்காக அரசை எதிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அது Vijayakanth க்கும் பொருந்தும் என்றார் Balu.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Related Post:

3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!
Vijaykanth: திருமண மண்டபம் இடிப்பு - திட்டமிட்ட சதி!!!

Powered by Blogger